Followers

Thursday, January 30, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 19


வணக்கம் நண்பர்களே!
                    நாகரீக உலகத்தில் அடுத்தவீட்டில் என்ன நடக்கிறது என்று கூட தெரிய வாய்ப்பு இல்லை. அடுத்த வீட்டில் யார் இருந்தால் நமக்கு என்ன என்று இருந்துவிடுவார்கள். ஒரு அவசர தேவைக்கு அடுத்த வீட்டுக்காரன் தான் உதவமுடியும் என்பதை அனைவரும் மறந்துவிட்டனர்.

அடுத்த வீட்டுக்காரர்களை காட்டும் மூன்றாம் இடம் கெட்டு இருந்தால் அடுத்தவீட்டுக்காரர்களோடு சண்டை சச்சரவு ஏற்படும். கிராமங்களில் இது அதிகமாக இருக்கும். உங்கள் வீட்டு கோழி வேலியை தாண்டி வருகிறது என்று சண்டை ஆரம்பித்து கொலையில் முடியும் நிலை எல்லாம் இந்த வீடு வழியாக வரும். 

மூன்றாவது வீட்டை பொருத்தவரை கெடுதல் கிரகங்கள் இருந்தால் நல்லது என்று சொல்லுவார்கள். கெடுதல் கிரகங்கள் இருந்தால் நல்லது தான் ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் உங்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அப்படி பிரச்சினை ஏற்படாமல் இருந்தால் நல்லது.

நமது தைரியத்தை காட்டும் இடம் என்பதாலும் அந்த இடத்தில் கெடுதல் கிரகங்கள் இருப்பது நல்லது. அதே நேரத்தில் ஒன்று பக்கத்து வீட்டுக்காரன் பிரச்சினையை கிளப்புவான் அல்லது காது பிரச்சினையை கொடுக்கும்.

இதற்கு தீர்வு என்ன என்றால் நல்ல தைரியமான தெய்வங்களாக பார்த்து வணங்கி வந்தால் உங்களுக்கு ஒரளவு சமன் செய்து காலத்தை ஒட்டலாம். அப்படி இல்லை என்றால் அடிக்கடி பயணங்களை செய்து கொண்டு இருந்தால் போதுமான ஒன்று.

இந்த வீட்டை அந்தளவுக்கு பலப்படுத்த கூடாது ஏன் என்றால் இது பலப்படுத்தினால் குடும்பஸ்தானம் அடிவாங்கிவிடும்.கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: