Followers

Monday, January 6, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 6


வணக்கம் நண்பர்களே!
                   கடந்த பதிவில் சொல்லிருந்த தகவலை வைத்து பெரும்பாலான நபர்கள் தன்னுடைய பிரச்சினைக்கு இவர்களை பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்று சொல்லிருந்தேன். முதலில் இவர்கள் உங்களுக்கு செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிவிடுகிறேன். சரியான நபராக பார்த்து தேர்ந்தெடுக்கும் உரிமையும் உங்களுக்கு இருக்கிறது.

நான் சொன்ன நபர்கள் ஆன்மீகத்தையே விரும்பாதவர்களாக இருந்தால் என்ன செய்வது கடினமான ஒன்று மட்டுமே. அவர்களுக்கு அந்த தகுதி இருந்தால் மட்டுமே அவரிடம் சென்று நாம் செய்யமுடியும் அவன் நோயாளியாக இருந்தால் அவன் எப்படி நமககு மருந்துக்கொடுக்கமுடியும். அந்த நபரும் ஆன்மீகம் அல்லது சோதிடத்தில் மீது நம்பிக்கை உள்ளவனாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு பிரச்சினை தீரும்.

உங்களை திருமணம் செய்பவர் உங்களுக்கு உதவுகிறார் என்ற வைத்துக்கொள்வோம் அவர் பகுத்தறிவுவாதியாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு அது மிகப்பெரிய பிரச்சினை. சோதிடமாவது ஆன்மீகமாவது என்று சொல்பவராக இருந்தால் நிலைமை மோசமாக தான் செல்லும். 

எனக்கு உறவுககார சகோதர்கள் நிறைய பேர் இருக்கின்றனர் ஆனால் ஒரு சகோதர் மட்டுமே ஆன்மீகத்தில் நல்ல ஈடுபாடு நான் அந்த சகோதரரை நாடி தான் அனைத்தையும் தெரிந்துக்கொள்ள முடிந்தது. நான் வேறு சகோதரை நாடி இதனை கேட்டால் சோதிடமாவது ஆன்மீகமாவது போய் வேலையை பாருடா என்று சொல்லுவார்கள்.

எனக்கு நிறைய சகோதர் இருந்தாலும் சரியான சகோதரை நான் தேர்ந்தெடுத்தேன். நல்ல விசயங்கள் கிடைத்தன அது போல் உங்களுக்கு நான் சொன்ன விசயத்திலும் அவர்களுக்கு அறிவு இருக்கும்பொழுது எளிதில் உங்களின் பிரச்சினை தீரும்.தேர்ந்தெடுப்பதும் மிக முக்கியம் அல்லவா.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: