Followers

Tuesday, January 7, 2014

குரு தசா பலன்கள் பகுதி 72


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் சுக்கிரனின் புத்தியைப்பற்றி பார்த்து வந்தோம். இந்த புத்தியில் உள்ள ஒரு குறை என்ன என்றால் இருவரும் எதிரிகள். குரு நல்லவர் சுக்கிரன் கெட்டவர். ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் குரு பொதுவாக விட்டுக்கொடுப்பார். சுக்கிரன் விட்டுக்கொடுக்கமாட்டார். 

குருவை பொருத்தவரை பொதுவாக இரக்ககுணம் இருக்கும் பிறர்க்காக விட்டுக்கொடுப்பார்கள். பெரிய பிரச்சினை எல்லாம் செய்யமாட்டார்கள்.

சுக்கிரனை பொருத்தவரை அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். நீ என்ன சொல்லுவது நான் என்ன செய்வது என்று கேட்பார்கள். அவ்வளவு எளிதில் சமாதானம் ஆகமாட்டார்கள்.

இருவரும் சேர்ந்து பலனை கொடுப்பதிலும் சிக்கல் அதிகமாக இருக்கும். பொதுவாக அடித்துக்கொள்ளும் நிலையில் தான் இருப்பார்கள்.யார் கை ஒங்கி உள்ளது என்று பார்த்து பலனை கொடுத்துக்கொண்டிருக்கும். குருவின் கை ஒங்கிவிட்டால் நேர்மையான வழியில் அனைத்தும் நடந்துக்கொண்டிருக்கும். பொதுவாக வெளிப்படையாக நடக்கும். அனைவரும் தெரிந்துக்கொள்வது போல் அது இருக்கும்.

சுக்கிரன் கை ஓங்கும்பொழுது பொதுவாக மறைமுகமாக தான் வேலை எல்லாம் நடைபெறும். யாருக்கும் வெளியில் தெரியாது போல் நடந்துக்கொண்டிருக்கும். அதுவே மிகப்பெரிய சிக்கலை இவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்துவிடும்.

இந்த புத்தியை பொருத்தவரை பலன் சொல்லும்பொழுது இருபலனையும் கலந்து பலனை சொல்லுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: