Followers

Wednesday, January 8, 2014

குரு தசா பலன்கள் பகுதி 73


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் சுக்கிரனின் புத்தியை பார்த்து வருகிறோம் ஒரு உதாரண ஜாதகம் வழியாக சுக்கிரனின் புத்தியை நாம் பார்ப்போம்.

இது ஒரு பெண்ணின் ஜாதகம். திருவோண நட்சத்திரம் தனுசு லக்கினம். மகரராசியை உடையவர். இவரு்க்கு திருமணம் நடந்துவிட்டது. திருமண வாழ்வு அந்தளவுக்கு சரியில்லை. தனியாக வாழ்ந்துவருகிறார். நல்ல உழைப்பாளியாக இருந்தார். மகரராசி அல்லவா உழைத்துக்கொண்டே இருப்பார்கள் அல்லவா. படித்தவர் ஒரு வேலையில் இருந்தார்.  

இவருக்கு ஒரு ஆசை நீண்டநாளாக இருந்தது. ஒரு நகரத்தில் சொந்தவீடு கட்டவேண்டும் என்பது மட்டுமே அது. நான் மன்னார்குடி செல்லும்பொழுது என்னிடம் சோதிடம் பார்த்தார். அப்பொழுது அவரிடம் கொஞ்சகாலம் பொருங்கள் அதற்கான நேரத்தை தருகிறேன் என்ற சொல்லிருந்தேன்.

குரு தசா நடந்துக்கொண்டிருக்கிறது. குரு கிரகம் லக்கினாதிபதியாக வேறு இருக்கிறார். அவர் பத்தாவது வீட்டில் இருக்கிறார். பத்தாவது வீட்டில் இருந்தாலும் அவரோடு கேது கிரகம் அமர்ந்திருக்கிறது. 

இவருக்கு குரு தசாவில் சுக்கிரபுத்தியில் வீட்டை கட்ட ஆரம்பியுங்கள் என்று சொல்லிருந்தேன். சுக்கிரனுக்கு ஒரு பரிகாரம் செய்யுங்கள் என்றேன். அவரும் செய்தார்.


குரு தசா சுக்கிரன் புத்தி ஆரம்பித்த நேரத்தில் வீட்டை கட்ட ஆரம்பித்தார். 2005 ஆம் ஆண்டு தை மாதத்தில் வீட்டிற்க்கு பால் காய்ச்சி குடி சென்றார். குரு தசாவில் சுக்கிரனின் புத்தியில் அவருக்கு இது நடந்து. சுக்கிரன் வீட்டை குறிக்கும் நான்காவது வீட்டில் இருக்கிறார். அதனை சரியாக இவருக்கு கொடுத்தது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: