Followers

Saturday, January 11, 2014

குரு தசா பலன்கள் பகுதி 75


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவில் சூரியபுத்தியைப்பற்றி பார்த்து வருகிறோம். பொதுவான தகவலாகவே சொல்லிவிடுகிறேன். சூரியன் நன்றாக இருந்தால் நல்ல தனலாபம் அரசியல் தொடர்புகள். படிப்பில் சிறந்து விளங்குவது. நிலபுலங்களால் லாபம் வழக்குகள் வெற்றி பெறுவது. மலை பிரதேசங்களுக்கு சென்று தங்குவது. வியாபாரத்தில் லாபம் தந்தை வழியில் உள்ள உறவினர்கள் உங்களுக்கு உதவுவது போன்றவை நடைபெறும்.

சாஸ்திரங்களை கற்பது சாஸ்திரங்களை கொண்டு அனைவருக்கும் பாடம் நடத்துவது பொதுபணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது. களத்திரவழியில் நன்மை ஏற்படுவது போன்றவை நடைபெறும்.

சூரியன் மறைவு ஸ்தானங்களில் இருந்தால் அல்லது சூரியன் கெட்டு புத்தியை நடத்தினால் அரசாங்கவழியில் தண்டனை அனுபவிப்பது. திடிரென குடும்பத்தில் சண்டை ஏற்படுவது. தந்தை வழியில் எதிரிகள் உருவாகுவது. தனவிரையம் ஏற்படுவது களத்திரம் வழியில் பிரச்சினை ஏற்படுவது. மனசஞ்சலம் ஏற்படுவது உடலில் பிரச்சினை ஏற்படுவது போன்றவை ஏற்படும்.

சூரியன் மறைவு ஸ்தானத்தை அடைந்துவிட்டால் அரசாங்கவழியில் உள்ள காரியங்கள் எதுவும் நடைபெறாது. இழுத்தடித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த புத்தி முடிந்தவுடன் நீங்கள் முயற்சி செய்யலாம்.

ஆத்மாக்காரன் மறையும்பொழுது உடல் நிலையிலும் பிரச்சினை ஏற்படும் என்பதால் ஏதாவது பிரச்சினை என்றால் உடனே மருத்துவரை நாடுவது நல்லது. ஒரு சிலருக்கு சூரியன் உடன் கெட்ட கிரகங்கள் அமர்ந்தால் உயிர்பயமும் ஏற்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: