Followers

Tuesday, January 21, 2014

குரு தசா பலன்கள் பகுதி 78


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவைப்பார்த்து வருகிறோம். குரு தசாவில் சந்திரனின் புத்தி நடைபெறும் காலத்தில் எப்படி பலன் தரும் என்பதை பார்க்கலாம். அனைத்தும் பொதுபலன் மட்டுமே.

பணவரவு நன்றாக இருக்கும். வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் உதவி கிடைக்கும். மனதிற்க்கு மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். விவசாயிகளாக இருந்தால் பசுக்கள் பெருகும். விளைச்சலும் அதிகமாக வரும்.

சந்திரன் என்பது தாயை குறிக்கும் கிரகம் என்பதால் தாய் மற்றும் தாய் வழியில் உள்ளவர்கள் உங்களுக்கு நல்லதை செய்வார்கள். மனிதனுக்கு ஒரு உதவி கிடைத்தால் அது பெரிய விசயம் அல்லவா. அதனை வைத்து அவன் முன்னேற்றம் அடைந்துவிடலாம் அதனால் இதனை சொன்னேன்.

சந்திரன் பிரச்சினை தரும் நிலையில் இருந்தால் மனது படப்படக்கும் பிரச்சினை முற்றும். பிரச்சினையில் இருந்து விடுபடமுடியாது. இந்த புத்தி நடைபெற்று முடியும் வரை உங்களின் மனதில் புயல் வீசும் சம்பவங்கள் நடைபெறும்.

ஒரு சிலருக்கு வீட்டில் தங்கம் திருடுபோகும். தாயாரின் உடல்நிலை பாதிப்படைய செய்யும்.ஒரு சில கெட்ட கிரகங்கள் சேர்ந்தால் தாயாரின் உயிரை கூட பறிக்கசெய்யும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: