Followers

Tuesday, January 7, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 8


வணக்கம் நண்பர்களே!
                    இரண்டாவது வீட்டைப்பற்றி சொன்னேன் அல்லவா. இந்த வீடு என்பது மிகவும் முக்கியம் என்று சொன்னேன். இந்த வீடு கெட்டால் துறவறம் செல்லவேண்டும் என்று சொன்னேன் அல்லவா. துறவத்திலும் இன்றைய காலகட்டத்தில் பணம் புகுந்து விளையாடுகிறது. அதனை நாம் எடுத்துக்கொள்ளமுடியாது இல்லறத்தில் இருப்பவர்களுக்கு தான் இதனை எடுத்துக்கொண்டு நாம் சொல்லவேண்டும்.

இன்றைய தேதியில் எனக்கு பணம் பிரச்சினை சார். நான் எவ்வளவோ போராடிவிட்டேன் கையில் பணம் தங்கமாட்டேன்கிறது அல்லது பணம் வரவே மாட்டேன் என்று சொல்லுபவர்கள் அதிகம் குடும்பத்தின் நபர்களை காட்டும் இடமும் இது மட்டுமே.

எந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டின் காரத்துவம் ஏதோ ஒன்றில் மட்டும் கெடும்.ஒருத்தருக்கு நல்ல பணம் வந்தால் அந்த வீட்டில் இருப்பவர்கள் ஒன்றாக இருக்கமாட்டார்கள். அதாவது மனைவியை விட்டுவிட்டு தொழில் விசயமாக வெளிநாடு சுற்றிக்கொண்டு இருப்பார்கள் ஒரு சிலர் அரசியல் என்று சுற்றிக்கொண்டு இருப்பார்கள். ஒருத்தருக்கு பணம் இல்லை என்றால் வீட்டோடு இருப்பார். எப்படி ஆப்பு அடிக்கிறது என்று பாருங்கள். இந்த வீட்டை பொருத்தவரை அனைத்தையும் கலந்து சரிவிகிதமாக தரவேண்டும்.

சரிசமமாக கொடுக்கின்றது என்றால் கண்டிப்பாக அனைவருக்கும் இது தராது.சரி என்ன செய்யலாம். எனக்கு பணமும் வேண்டும் குடும்பமும் வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். 

நமக்கு சாவு மணி அடிப்பதும் இந்த வீடு தான். இந்த கிரகம் நம்மை போட்டு தள்ளிவிடும். சாவை கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு தரக்கூடிய விசயங்களை மட்டும் முன்வைத்து நம்மை கொல்லுகிறது.

என்னை பொருத்தவரை எனக்கு இந்த வீடு கெட்டது. பணமும் வரவில்லை குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழவேண்டும் என்ற நிலையை உருவாக்கியதும் இந்த வீடு தான். அடுத்ததாக மரணத்தைப்பற்றி எண்ணவைத்ததும் இந்த வீடு மட்டுமே. எனக்கும் மரணத்தைப்பற்றி பயம் வந்த காரணத்தால் மட்டுமே ஆன்மீகத்தை தேர்ந்தெடுக்கமுடிந்தது.

வீட்டை விட்டு வெளியேற்றினால் நாம் போவது சொர்க்கமாகவா இருக்கும். கண்டிப்பாக நரகவாழ்க்கையாக தான் இருக்கும். அப்படி சென்ற இடமும் பல வகையிலும் பிரச்சினை தான் கொடுத்தது அப்படி கொடுத்தாலும் அனைத்தையும் சகித்துக்கொள்ளகூடிய திறமையை எனக்கு கற்றுக்கொடுத்தது என்பது மட்டுமே உண்மை.

இன்றைக்கு நான் எனது அம்மா அப்பாவை குறைச்சொல்லிக்கொண்டு எனக்கு புண்ணியம் செய்யவில்லை என்று நான் சொல்லிக்கொண்டு இருந்தேன் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு இந்த பதிவை எழுதியிருக்கமுடியாது.  உங்களின் விதிக்கு நீங்கள் மட்டுமே முழுபொறுப்பு ஏற்கமுடியும்.

எனது அம்மா அப்பா நன்றாக வாழ்ந்தவர்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர் நன்றாக புண்ணியம் செய்திருக்கிறார்கள் தான் ஆனால் எனது ஜாதகம் மிகப்பெரிய பிரச்சினை கொடுக்கும் ஜாதகமாக அமைந்தது. நான் அதனைக்கண்டு பயம்கொள்ளாமல் பழி தூக்கி அடுத்தவர்கள் மீது போடாமல் நானே அனைத்திற்க்கு வழியை கண்டுபிடித்தேன். கண்டுபிடித்த வழி எனக்கும் பயன்படுகிறது அடுத்தவர்களுக்கும் பயன்படுகிறது.

அப்பொழுது என்னிடம் இருந்த ஒரு ஒரே சக்தி பொறுமை மட்டுமே. பொறுமையாக அனைத்தையும் எதிர்க்கொண்டால் மட்டுமே அனைத்தும் சாத்தியப்படும்.

ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் இழுக்கும்போக்கிற்க்கு நாம் சென்றுவிடகூடாது. நமது இழுப்புக்கு தான் கிரகங்கள் வரவேண்டும். கண்டிப்பாக வரும்.வர வைக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: