Followers

Thursday, January 30, 2014

பெரிய பாவம்


வணக்கம் நண்பர்களே!
                    பல பேர்கள் என்னிடம் பரிகாரம் செய்தும் ஒன்றும் பயன் இல்லை என்று சொல்லுவார்கள். அவர்களிடம் பலவற்றை நான் கேட்டு எப்படி செய்தீர்கள் என்ன என்ன முறையில் எல்லாம் செய்தீர்கள் என்று கேட்பது உண்டு அந்த முறை எல்லாம் சரியாக தான் செய்வார்கள் ஆனால் பரிகாரம் வேலை செய்யாமல் இருக்கும். நானும் மண்டை போட்டு உடைத்துக்கொண்டு மனதிற்க்குள் கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பேன். 

கடைசியில் தான் ஏன் வேலை செய்யவில்லை என்ற விபரம் தெரியும். அது என்ன விபரம் என்றால் பெற்ற தெய்வத்தை நட்டஆற்றில் விட்ட கதை தெரியவரும். மனைவியின் பேச்சை கேட்டு தாய் தந்தையை அப்படியே விட்டுவிட்டு வந்து விடுவார்கள். இவர்கள் பரிகாரம் செய்து நடக்கவில்லை என்று சொல்லுவதின் காரணம் என்ன என்று அப்பொழுது தான் எனக்கு புலப்பட்டது.

இப்பொழுது உள்ள பெருவாரியான குடும்பங்களில் தங்களின் பெற்றோரை விட்டுவிடுகிறார்கள். எப்படியே அவர்கள் இருந்துவிட்டு போகின்றனர் என்று விட்டுவிடுகிறார்கள். இருக்கின்ற பாவங்களில் இது தான் மிகப்பெரிய பாவம். இப்படி அவர்களை விட்டுவிட்டால் எந்த தெய்வம் தான் வரம் தரும். நான் முட்டி மோதினாலும் ஒன்றும் நடக்காது.

உங்களின் பெற்றோர்களை என்று தனியாக கஷ்டப்படவேண்டும் என்று விட்டுவிட்டீர்களோ அன்றே உங்களின் கர்மாவின் கணக்கில் பெரிய பாவம் ஏறிவிடும்.உங்களுக்கு ஏதுவும் நடக்கவில்லை என்று கோவில் குளங்கள் என்று சுற்றுவது வீணான ஒரு வேலை. என்னிடம் வரும் அனைவருக்கும் சொல்லும் முதல் செய்தி உங்களின் பெற்றோர்களை நீங்கள் விட்டுவிட்டால் தயவு செய்து என்னிடம் வராதீர்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

APEX learning said...

"அனைவருக்கும் சொல்லும் முதல் செய்தி உங்களின் பெற்றோர்களை நீங்கள் விட்டுவிட்டால் தயவு செய்து என்னிடம் வராதீர்கள்."

மிக சரியாக சொல்லியிருக்கீர்கள்!

rajeshsubbu said...

நன்றி நண்பரே