Followers

Saturday, January 11, 2014

தம்பிகளுக்காக இந்த பதிவு


ணக்கம் ண்பர்களே!
                    நேற்று காலையில் எழுந்தவுடன் ஒரு நண்பர் விடியற்காலை 4:30 மணிக்கு எல்லாம் போன் செய்தார். யார்ப்பா இந்த நேரத்தில் நமக்கு போன் செய்கிறார்கள் என்று எடுத்து பேசினேன். எதிர்முனையில் ஒரு நண்பர் சார் பீரியாக இருக்கிறீர்களாக என்று கேட்டார். சொல்லுங்க என்றேன்.

எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை என்றார். நான் போன் செய்துவிட்டீர்கள் எதுவாக இருந்தாலும் சொல்லுங்க என்றேன். ஒன்றும் இல்லை சார் நான் ஒரு பெண்ணை லவ் பண்ணினேன் அந்த பெண்ணிற்க்கும் எனக்கும் பிரச்சினை ஆகிவிட்டது இருவரும் பிரிந்துவிட்டோம் என்றார்.

எனக்கு ஏன் போன் செய்து உங்களின் லவ் மேட்டரை சொல்லுகிறீர்கள் என்றேன்.அவர் எனக்கு கஷ்டமாக இருக்கின்றது அவளை நான் மறக்கமுடியவில்லை அதனால் ஏதாவது செய்து என்னையும் அவளையும் சேர்க்கமுடியுமா என்றார்.இந்த மேட்டரை சொல்லுவதற்க்காக இந்த நேரத்தில் போன் செய்தீர்கள் என்றேன்.என்னால் முடியவில்லை சார் அது தான் போன் செய்தேன் என்றார்.

லவ் மேட்டரில் சேர்க்கின்ற வேலையை எல்லாம் நான் செய்கிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது என்றேன். இல்லை சார் நீங்கள் மந்திர எல்லாம் எழுதுகிறீர்கள் அதனால் கேட்டேன் சார் என்றார். அது எழுதியது தான் நான் செய்த தவறு என்று நினைக்கிறேன். ஊரில் எங்கு காதல் தோல்வி ஏற்பட்டாலும் எனக்கு தான் போன் செய்கிறீர்கள் என்றேன். 

நண்பர்களே இப்படிப்பட்ட காதல் மேட்டரைப்பற்றி குறைந்தது ஒரு போன் கால் ஆவது வந்துவிடுகிறது. அவன் அவன் கட்டிய பொண்டாண்டியை விட்டுவிட்டு புலம்பிக்கொண்டிருக்கிறான். இவர்கள் என்னாட என்றால் காதலி விட்டுவிட்டு போனதற்க்கு தூஙகாமல் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

மந்திரத்தால் இந்த மாதிரி வேலை எல்லாம் ஒருபோதும் செய்யமுடியாது என்பதை முதலில் நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள். அப்படி சொல்லுகின்றவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்று அர்த்தம். மந்திரத்தால் முடிந்த காரியம் நீங்களும் உங்களின் காதலியும் சேர்ந்து இருந்து நாங்கள் திருமணம் செய்துக்கொள்கிறோம் என்று சொல்லும்பொழுது வரும் எதிர்ப்புகளை முறியடிக்க செய்யமுடியும். அதுவும் நான் செய்வதில்லை ஒரு நபருக்கு மட்டும் செய்தேன். இப்பொழுது அதனை நான் விட்டுவிட்டேன்.

ஒரு சிலர் வசியம் செய்கிறேன் என்று சொல்லுவதை படித்திருக்கிறேன் அதுவும் எனக்கு தெரியாது. பொதுவாக ஒரு சிலர் வைப்பு முறைகளை பின்பற்றி செய்கிறார்கள் என்று நமது நண்பர்கள் சொல்லுவார்கள். அது எல்லாம் எனக்கு தெரிந்தால் நான் இந்த நேரம் பதிவை எழுதுவதை விட்டுவிட்டு இந்த வேலையில் இறங்கி கோடி கோடியாக சம்பாதிக்கலாம்.

மந்திரத்தால் பிரிந்தவரை சேர்க்கலாம் என்று  நம்பி நீங்கள் செல்லாதீர்கள். இது மிகப்பெரிய ஏமாற்றுவேலை. எனக்கும் போன் செய்து தொந்தரவை கொடுக்காதீர்கள்.

பொதுவாக நான் பார்த்த காதல் திருமணங்கள் எல்லாம் பிரச்சினையில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஏகாப்பட்ட மனகசப்பு ஏற்பட்டு வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். நான் ஒன்றும் காதலுக்கு எதிரி இல்லை ஆனால் அனுபவத்தில் பார்க்கும்பொழுது குடும்ப நபர்கள் சேர்ந்து செய்து வைக்கும் திருமணங்கள் பிரச்சினை இல்லாமல் சென்றுக்கொண்டிருக்கிறது. சிறிய பிரச்சினை என்றாலும் அதனை தீர்ப்பதற்க்கு குடும்ப உறுப்பினர்கள் இருக்கின்றனர். காதல் திருமணத்தில் அது இல்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கு பின்னாடி ஒரு ஆட்டோகிராப் இருக்கதான் செய்கிறது அதனை எல்லாம் மறந்துவிட்டு கட்டிய மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர். காதலி போனாலும் பரவாயில்லை நீங்கள் புதிய ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்துக்கொள்ளுங்கள். நல்ல வாழ்க்கை அமையும். திருமணம் முடிந்து பிரச்சினை என்று வரும்பொழுது என்னை தேடி வாருங்கள் என்னால் முடிந்த உதவியை உங்களுக்கு செய்கிறேன்.

படக்கதை மாதிரி நான் எழுதிக்கொண்டிருக்க வேண்டிவரும். நல்ல விசயங்களை மட்டுமே நாம் பார்க்கவேண்டும். உங்களால் காதல் கதை எழுதவேண்டியதாகிவிடுகிறது.

தம்பிகளா விடியற்காலையில் எல்லாம் போன் செய்யாதீர்கள் என்னை தயார்படுத்தும் நேரம் அது.
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: