Followers

Monday, January 20, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    பொதுவாக ஒரு மனிதனுக்கு கோபம் வருவதற்க்கு காரணம் ஒரு சில கிரகங்களின் தாக்குதலால் நடைபெறுவது உண்டு. கணவன் மனைவிக்குள் கோபம் வரும்பொழுது இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுவிடும். இது நாளடைவில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவாவதற்க்கு முன் நாம் எச்சரிக்கையாக செயல்பட்டு அதனை தடுக்கவேண்டும்.

எங்களுக்கு தெரிந்த நட்பு வட்டங்களில் கணவன் மனைவி இருவருக்கும் திடீர் என்று பிரச்சினை ஏற்பட்டால் என்னை தொடர்புக்கொண்டு சொல்லுவார்கள். அவர்களின் பிரச்சினை கேட்டுவிட்டு அன்று இரவே அதற்க்கான வேலைகளை செய்வது உண்டு.

கோபம் ஏற்படும் நபர்களின் மனது மிகப்பெரிய அளவில் எரிமலை போல் எரியும். அதனை குளிருட்டவேண்டும். அப்பொழுது தான் சாந்தமாக மாறுவார்கள். அதற்கு நாங்கள் இரவில் அமர்ந்து தியானம் செய்வது உண்டு.

ஒரு மனிதன் பலகீனம் அடைவது இரவு நேரத்தில் மட்டுமே அந்த நேரத்தில் தியானம் செய்து அவர்களின் கோபபடுகின்ற மனதை சாந்தப்படுத்துவோம். மறுநாள் காலையில் சம்பந்தப்பட்ட நபர் எழும்பொழுது மகிழ்ச்சியோடு எழுவார். இருவரும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.

அதே நேரத்தில் இரவு தியானம் என்பது மிகவும் உகந்தது. ஆன்மீகத்தில் கூட இரவை நன்றாக பயன்படுத்தவேண்டும் என்று தான் சொல்லுவார்கள். எந்த ஒரு பெரிய வேலையும் இரவோடு இரவாக முடித்துவிடுவது உண்டு.

ஒரு ஆன்மீகவாதி எந்த ஒரு மனதையும் சாந்தப்படுத்தி சந்தோஷத்தை தரவேண்டும் அப்பொழுது மட்டுமே அவன் ஆன்மீகவாதி. இந்த வித்தையை கற்றவர்கள் மிகப்பெரிய சக்திபடைத்தவர்களாக இருப்பார்கள.
நம்பினால் நம்புங்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: