Followers

Thursday, January 2, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டு அதனை வெற்றி பெறுவது என்பது ஆன்மீகத்தில் மிகவும் கடினம். அதாவது ஆன்மீகம் துணைக்கொண்டு அதனை செய்து முடிப்பது கடினமான காரியமாக தான் இருக்கும். 

இப்பொழுது முக்கால்வாசி காரியங்கள் வெற்றி பெற்று வருகிறேன். இதற்கே அம்மனுக்கு நன்றி கடன்பட வேண்டும். 100 சதவீதம் கூடியவிரைவில் எட்டிவிடுவேன் என்று நம்புகிறேன். அப்படி எட்டிவிடுவது மிகசுலபமாக அது எனக்கு இருக்கும். என்ன ஒரு சிக்கல் என்றால் அதற்க்கான சூழல் அமையவில்லை. 

சூழலை தேடி நான் போகவேண்டும் அப்படி போகும்பொழுது அனைத்தையும் பெற்றுவிடமுடியும். அப்படி போகுவதற்க்கு இப்பொழுது மனம் இல்லை. நிறைய சுயவேலைகள் இருப்பதால் அதனை எல்லாம் ஒதுக்கிவைத்துள்ளேன். சுயவேலைகள் முடித்தவுடன் அதனை நோக்கி நாம் நகரவேண்டும் என்று எண்ணியுள்ளேன்.

உண்மையில் சக்தி என்பதை எல்லாம் ஒருகாலம் வரை உணரமால் இருந்தேன். அது எல்லாம் பொய் என்று நினைத்தேன். நாம் பார்ததவுடன் அதனைப்பற்றி தெரிகிறது.ஒவ்வொருவருக்கும் இந்த சக்தி இருக்கிறது அதனை பயன்படுத்த கற்றுங்கள். எத்தனை சொன்னாலும் கோடியில் ஒருவருக்கு மட்டுமே இப்படி நடக்கிறது. கோடியில் ஒருவர் மட்டுமே அதனை நோக்கி செல்லுகிறார்கள்.

நீங்களும் வாழ்வில் ஒருமுறையாவது இதனை எல்லாம் பாருங்கள். உங்களுக்குள் அப்படிப்பட்ட ஒரு விசயம் இருப்பதை இது வரை உணராதவர்கள் அதனை நோக்கி செல்லுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: