Followers

Wednesday, January 22, 2014

சோதிட அனுபவம்


ணக்கம் ண்பர்களே!
                    இரண்டு நாட்களுக்கு முன்பு நமது ஜாதககதம்பத்தை படித்துவிட்டு ஒரு நண்பர் அவருடைய நண்பர் ஒருவருக்கு பிரச்சினை என்று என்னிடம் அழைத்துக்கொண்டு வந்தார். 

அவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அவரின் மனைவி பிரச்சினையை ஏற்படுத்துகிறார் என்று வந்திருந்தார். முதலில் அவர் இந்த பிரச்சினையை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார். பிரச்சினை முற்றியவுடன் நண்பரிடம் சொல்லியுள்ளார். நண்பரும் சோதிடத்தை பார்க்கலாம் என்று எண்ணி அவர் மற்றும் அவரின் மனைவியின் ஜாதகத்தை பார்த்திருக்கிறார்.ஜாதகத்தை பார்த்தவுடன் தான் தெரிந்திருக்கிறது பிரச்சினை. நண்பர் என்னிடம் அழைத்து வந்தார்.

நானும் ஜாதகத்தை பார்த்தேன். ஜாதகத்தை பார்த்தால் அவரின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. விருச்சின லக்கினத்தை உடையவராக இருக்கிறார். அவருக்கு தற்பொழுது எந்த கிரகமும் சரியில்லை என்பது மட்டும் தெரிந்தது. உங்களின் மனைவி உங்களை அடித்தால் கூட வாயை திறக்காதீர்கள் என்று சொன்னேன்.

இவருக்கு சோதிடம் பார்க்கும்பொழுது எனது கம்யூட்டர் மவுஸ் கீழே விழுந்து உடைந்துவிட்டது. சரி இவருக்கு சனி ஆப்பு அடிக்கிறார். இவர்களின் குடும்பத்தில் முன்னோர்கள் ஏதோ பிரச்சினை செய்திருக்கிறார் என்று தெரியவந்தது.

இவரின் மனைவியின் ஜாதகம் மிகவும் மோசமான ஒரு ஜாதகம். சாதாரணமான சோதிடர் பார்த்தாலே மனைவியின் ஜாதகத்தை நிராகரித்திருப்பார் என்பது தெரியும். யாரோ இவரை பழிவாங்கிவிட்டார்கள். முடிந்த கதை எதற்கு. இனி நடக்கும் கதையை பார்க்கலாம்.

எப்படியும் விவாகாரத்து வாங்கிவிடவேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு பரிகாரம் சொல்லுங்கள் சார் என்றார். பொதுவாக நான் இதற்கு எல்லாம் பரிகாரம் சொல்லுவது கிடையாது காரணம் இவர்களின் குழந்தைகள் பாதிக்கப்பட செய்வார்கள். அந்த காரணத்தால் இதனை எல்லாம் சொல்லுவது கிடையாது.

கடைசியில் அந்த மனிதர் சொன்னது சார் எனக்கு மரணம் எப்பொழுது சார் வரும் என்றார். இல்லறத்தில் இருப்பவன் மரணத்தை தேடுகிறான் என்றால் அவன் எந்த மாதிரி கஷ்டப்பட்டு இருப்பான். இப்படி கேட்டவுடன் உங்களுக்கு இப்பொழுது மரணம் இல்லை சார் என்றேன். மரணத்தைப்பற்றி ஒரு சில விசயங்கள் எல்லாம் சொல்லும்பொழுது அவர் எனக்கு ஏன் அந்த தசாவில் மரணம் வரவில்லை என்று கேட்டார். அப்படி ஒரு கஷ்டத்தை அவரின் மனைவி கொடுத்திருக்கிறார் என்று நல்ல தெரிகிறது.

இவருக்கு என்னால் எதுவும் செய்யமுடியவில்லை காரணம் தற்பொழுது அவரின் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் சூழ்நிலை அப்படி இருக்கிறது. ஒரு சிலருக்கு மனைவி என்பவள் வீட்டிற்க்கு குத்துவிளக்காக வரும். ஒரு சிலருக்கு வீட்டை கொளுத்திவிட்டு சென்றுவிடும். அவன் அவன் வாங்கி வந்த வரம்.

ஒரு பிரச்சினை ஆரம்பிப்பதற்க்கு முன்னர் வந்து சோதிடரை சந்தித்தால் அந்த பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்க்கு வழியை சொல்லுவார். வந்தபிறகு என்ன செய்யமுடியும். ஜாதககதம்பதை படித்த நண்பர் தான் அழைத்து வந்தார் எப்படியும் காப்பாற்றுவார் என்று தான் அழைத்துவந்தார் அவருக்கு நன்றி ஆனால் பிரச்சினை முற்றிவிட்டது.

என்னால் எதுவும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டேன். இது ஒரு பதில் அல்ல தான் என்ன செய்வது. வெள்ளம் வருவதற்க்கு முன் அணையை போட்டுவிடவேண்டும். வந்த பிறகு அது அடித்துவிட்டு செல்லும்.

அந்த பெண்ணின் ஜாதகத்தில் ஒரு விசயம் தென்பட்டது அது என்ன என்றால் சனி கிரகம் உச்சத்தில் இருந்தது. பெண்களின் ஜாதகத்தில் சனி உச்சம் பெற்றால் கணவனை எல்லாம் மதிப்பது என்பது குறைவாக இருக்கும். நானே சம்பாதிக்கமுடியும் எனக்கு எதற்கு இவர் என்று விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். செவ்வாய் உச்சம் பெற்றால் கணவன் எதாவது பேசினால் ஒரே அடியில் மண்டையை பிளந்துவிடுவார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

5 comments:

Naresh said...

நன்றி ராஜேஷ்

சனியும் செவ்வாயும் சேர்ந்து விரிச்சகத்தில் இருந்தால்?

rajeshsubbu said...

வணக்கம் இரண்டு சேர்ந்து இருக்கும்பொழுது அசந்தால் கொலை கூட செய்வார்.

Dharmaraajk said...

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி..... மேலும் காளிதாசர் அருளிய இந்து லக்கினம் பற்றி தயவுசெய்து கூற முடியுமா ?

B.Guru Venkatesh said...

Kanchipuram ashta bujanga perumal kovil pona themir pudicha manaiviyin manam marum apppadinu kelvipattu iruken neengal en andha kovil ku kovil poga sollirukalame sir

Swami said...

அந்த பெண்ணின் ஜாதகத்தை கொடுத்தால்,எங்களை போன்ற ஜோதிட மாணவர்களுக்கு உபயோகமா இருந்து இருக்கும்.