Followers

Thursday, January 2, 2014

நண்பர்களின் கவனத்திற்க்கு


வணக்கம் நண்பர்களே!
                    இலவச சோதிடம் பார்ப்பவர்களின் கவனத்திற்க்கு இந்த சேவையை வழங்குவதே இந்த தளத்திற்க்கு வரும் ஏழை மக்கள் பயன்பெறவேண்டும் என்பதற்க்காக மட்டுமே செய்து வருகிறேன். இதனை அனைவரும் பயன்படுத்துகின்றனர். சரி பரவாயில்லை என்று நானும் சொல்லிவருகிறேன்.

இதில் இப்பொழுது என்ன நடைபெறுகிறது என்றால் ஒரு ஜாதகத்தை வைத்து பத்து நாளுக்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் எனக்கு ஜாதகத்தை அனுப்பி கேள்வி கேட்கிறார்கள். எப்படி நான் பதில் சொல்லமுடியும்.ஒரு வசதியை நான் கொடுத்தால் அதனை பயன்படுத்திக்கொண்டு அடுத்தமுறை வரும்பொழுது கட்டண சோதிடத்திற்க்கு வந்துவிடவேண்டும். இலவசத்திலேயே அனைத்தையும் கேட்டு தெரிநதுக்கொண்டு என்ன செய்ய போகிறீர்கள். 

உங்களுக்கு பதில் அளிக்கும் நேரத்தில் ஒரு ஏழைக்கு நான் உதவி செய்யலாம் அல்லவா. புதிய பதிவுகளை உங்களுக்கு தரலாம் அல்லவா.அதே நேரத்தில் இலவசசோதிடத்தில் நீங்கள் சொல்லும் பிரச்சினை எல்லாம் தீர்ப்பதாக இருந்தால் அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. மிகப்பெரிய பிரச்சினையை கொண்டு வந்து அதற்கு பரிகாரத்தை கேட்டால் நான் என்ன சொன்னாலும் அது உங்களுக்கு நடைபெறாது. நாங்கள் இறங்கி அதனை தீர்க்க வழி செய்தால் மட்டுமே முடியும். இலவசத்தில் எப்படி முடியும்?

ஏழைகளுக்கு கிடைக்கும் உதவியை நீங்கள் தடைசெய்யவேண்டாம். நீங்கள் முதல் முறை வரும்பொழுதே நன்றாக தானே சொன்னேன். ஏன் மறுபடியும் மறுபடியும் தொந்தரவு செய்கிறீர்கள்..ஏழைகள் பயன்பெறட்டும் அதில் பிரச்சினையை உருவாக்காதீர்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: