Followers

Thursday, January 30, 2014

அம்மன் தரும் வாய்ப்பு


ணக்கம் ண்பர்களே!
                    நண்பர்களிடம் பல தடவை நான் சொல்லுவது என்ன என்றால் ஆன்மீகவாதிகளை நீங்கள் சந்தித்து ஆலோசனை பெறும்பொழுது உங்களுக்கு என்ன தேவையோ அனைத்தையும் ஒரே ஆளிடம் பெற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு ஆன்மீகவாதிகளை சந்திக்காதீர்கள். அப்படி சந்திக்கும்பொழுது பல பேர்கள் உங்களுக்கு செய்யும்பொழுது நீங்கள் பிரச்சினையில் மாட்டிக்கொள்வீர்கள்.

நான் ஒரு பக்கம் செய்துக்கொண்டிருப்பேன். வேறு ஒருவர் அடுத்தபக்கம் செய்துக்கொண்டிருப்பார் கடைசியில் பிரச்சினை உங்களுக்கு வந்துவிடும். நான் இப்பொழுது வருபவர்களுக்கு எல்லாம் மிகவும் பொறுமையாக தான் செய்துக்கொண்டிருக்கிறேன். காரணம் இவர்கள் பல பேர்களை சென்று சந்தித்து வந்திருக்கிறார்கள் அவர்களுக்கு உடனே நாம் செய்யகூடாது என்ற காரணத்தால் அப்படி செய்கிறேன்.

என்னிடம் பொதுவாக முன்பணம் வாங்குவது என்பது கிடையாது. இலவசமாக தான் முதலில் செய்கிறேன்.இதற்கு ஆசைப்பட்டே பல நண்பர்கள் வந்துவிடுகிறார்கள். நான் செயது தருகிறேன் அதற்கு தகுந்த விலையை நீங்கள் வைக்காமல் செல்லமுடியாது. நான் கேட்பதில்லை ஆனால் உங்களிடம் இருந்து எப்படி வாங்கவேண்டும் என்று அம்மன் பார்த்துக்கொள்ளும்.

அம்மனை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். கொஞ்சம் பிரச்சினை செய்தாலும் அது பலமடங்காக உங்களை நோக்கி திரும்பி வரும். பல பேர்களுக்கு அது காட்டிக்கொண்டு இருக்கிறது. கிடைக்கின்ற வாய்ப்பை நன்றாக பயன்படுத்தினால் நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: