Followers

Saturday, January 11, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    குரு என்னிடம் சொல்லும்பொழுது நீ இதனை வைத்து சம்பாதிப்பது கடினம் ஏன் என்றால் இதனை அவ்வளவு எளிதில் யாரும் நம்பமாட்டார்கள் என்றார். அதாவது ஏதாவது பூஜைகள் செய்துக்கொடுத்தால் நீ பணம் சம்பாதிக்கலாம் இதனை வைத்து எப்படி சம்பாதிக்கமுடியும் என்றார். 

பொதுவாக நாங்கள் பின்பற்றும் முறையில் அதிகப்பட்சம் பூஜை முறைகள் இருக்காது உங்களை என் கண்ணால் பார்த்தால் போதும் உங்களுக்கு என்ன தேவையோ அது நடைபெறும். அதிகப்பட்சம் பிரச்சினைகளுக்கு மட்டுமே பூஜை முறைகள் செய்வது உண்டு.

ஒரு சில வீடுகளுக்கு நான் செல்வது உண்டு அப்படி செல்லும்பொழுது அவர்களின் மனதை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதனை செய்வேன்.

அதிகபிரச்சினை உள்ளவர்களை அடிக்கடி எங்களை சந்திக்க சொல்லுவது உண்டு. அது ஏன் என்றால் எங்களின் கண் பார்வை அவர்களின் மேல் விழவேண்டும் என்பதால் அப்படி செய்வது உண்டு.

பெரிய கம்பெனிகளையே சும்மா சுற்றி பார்த்துவிடடு வருவேன் அந்த கம்பெனி மூடி கிடந்தாலும் அது திறக்கப்பட்டு வேலை செய்ய ஆரம்பிக்கும். இது எல்லாம் எப்படி நடைபெறுகிறது என்று நீங்கள் யோசித்து பார்த்தால் சூட்சமும் என்ன என்று உங்களுக்கு புரியும்.

நம்பினால் நம்புங்கள்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: