Followers

Thursday, January 2, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                      எனது வாழ்க்கை மிகப்பெரிய பல சிக்கல் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே உங்களுக்கு சொல்லியுள்ளேன். அப்படி சிக்கல் எல்லாம் வந்தபொழுதும் நான் சுயபரிசோதனை செய்துக்கொள்ள ஆரம்பித்தேன் அபபொழுது பிடிப்பட்டது தான் சோதிடம் எல்லாம். நமக்கு நடப்பது எதுவும் நம்மால் நமக்கு ஏற்பட்டது என்பது மிக குறைவாகவே எனக்கு இருந்தது. அனைததும் யாரோ ஒருவர் திட்டமிட்டு நடத்தும் செயலாகவே அது இருந்தது. 

பல சோதிடர்களிடம் காட்டி ஒன்றும் பலன் இல்லை காரணம் அவர்கள் பலன் சொலலுவதோடு  சரி அதன் பிறகு ஒன்றும் நடைபெறாது.  அதன் பிறகு நானே படித்து தெரிந்துக்கொண்டேன். படித்த பிறகு தான் தெரிந்து நமது ஜாதகத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது.

நம்மால் ஒரு வளர்ச்சியும் அடையமுடியாது என்பதை தெரிந்துவிட்டது. அதன் பிறகு இதனை வழிபாடு செய்து ஒன்றும் அகற்றமுடியாத ஒரு நிலை ஏற்பட்டதை நினைத்து கவலைப்பட்டேன். அப்பொழுது தான் எனது பெரியப்பாவின் பையன் எனது தம்பி சொன்ன ஐடியா. ஜாதககத்தை வைத்து எதுவும் செய்யமுடியாது சாமியாரை பிடித்தால் இதற்கு வழி கிடைக்கும் என்று சொன்னான். நான் எங்கு போய் சாமியாரை தேடுவது என்றேன். அவன் நான் பார்க்கிறேன் என்றான்.

தம்பி பல சாமியார்களை பார்த்த பிறகு தான் எனக்கு சாமியார்கள் கூட பழக்கம் ஏற்பட்டது. எங்களுக்குள் ஒரு வெறி இருந்தது. கடவுள் என்ன நமக்கு விதி விதிப்பது நம்ம விதியை நாம் கையில் எடுக்கவேண்டும் என்பது மட்டுமே. இது மிகவும் அசாத்தியமானதாக இருந்தால் கூட இதனை செய்யவேண்டும் என்பதில் இருவரும் பிடிவாதமாக இருந்தோம். 

பலநாட்கள் தூககத்தை தொலைத்து இரவு நேரத்தில் கூட சென்று தேடிய நாட்கள் உண்டு. பல துறவிகளை தம்பியும் நானும் சந்தித்து உண்டு. பல பேர்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் எங்களுக்கு ஒன்றும் உடன்பாடு ஏற்படவில்லை. கடைசியாக முதலில் எனது தம்பி சந்தித்த ஆள் எனது குரு. அதன் பிறகு நடந்த கதை உங்களுக்கு தெரியும்.

ஒரு நபரை கண்டுபிடித்துவிட்டோம் நம்ம ஜாதகத்தை கொடுத்து செய்ய சொல்லலாம் அவருக்கு என்ன வேண்டுமோ அதனை செய்துவிடுவோம் என்ற எண்ணம் மட்டுமே முதலில் இருந்தது. அதன் பிறகு இதனை இவர் நமக்கு கற்றுக்கொடுத்தால் நாம் பிறர்க்கு செய்யமுடியும் என்று எண்ணம் ஏற்ப்பட்டது. 

குரு அவர்கள் நீ கற்றுக்கொள் என்று தான் முதலில் சொன்னார். உடனே நானும் கற்றுக்கொண்டேன். கற்றுக்கொண்ட விசயங்கள் அனைத்தும் பொக்கிஷம் என்று தான் சொல்லவேண்டும்.இன்றைக்கு தேதியில் என்னை சந்திப்பவர்களுக்கு நன்மை நடைபெறுகிறது என்றால் இது மட்டுமே காரணம்.

இந்த கலையை பிறர்க்கு கொடுக்கமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது பிறர்க்கு கலையை கொடுக்கவேண்டும் என்றால் அவர் எனது துணைவராக இருப்பார். குடும்பத்தில் உள்ள நபர்களாக அந்த நபர் இருப்பார். கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காத ஒரு பொக்கிஷமாக இருக்கிறது. என்னை நாடிவரும் நபர்களுக்கு பிரச்சினை தீரும்.

பிரச்சினையை தீர்க்கும்பொழுது ஒரு சின்ன சிக்கல் ஒன்று உள்ளது. சின்ன பிரச்சினை உடனே தீர்ந்துவிடும். பெரிய பிரச்சினை என்றால் சம்பந்தப்பட்ட நபர் பல தடவை என்னை சந்திக்கவேண்டிருக்கும். 

கிரகங்கள் அதன் வேலையை நிறுத்தவே நிறுத்தாது அது வேலை செய்துக்கொண்டே இருக்கும். ஒரு ஜாதகத்தில் ஒரு வீடு பிரச்சினை என்றால் அந்த வீட்டின் வழியாக வரும் கெடுதலை தடுக்க ஒரு சாதாரணமனிதர் செய்யும் பரிகாரம் என்பது வேலை செய்யாது. ஒரு மகானை நீங்கள் தேடிச்சென்றால் அவர் செய்வார். கண்டிப்பாக அந்த வீட்டின் வழியாக நடைபெறும் கெடுதல் பலன் வரவே வராது.

நான் மகான் அல்ல .குரு மகான் அவரை வைத்து செய்துவிடுவேன்.ஒவ்வொரு மகானும் செய்யும் வேலை கிரகங்களின் இயக்கத்தை மாற்றுவது மட்டுமே. 

நம்பினால் நம்புங்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: