Followers

Tuesday, January 7, 2014

எப்படி நடைபெறுகிறது?


வணக்கம் நண்பர்களே!
                    டன் கணக்கில் பிரச்சினையை வைத்துக்கொண்டு என்னை தொடர்புக்கொள்பவர்கள் அதிகம் பேர். அவர்கள் தொடர்புக்கொள்வது நல்லது என்னால் முடிந்த உதவியை உங்களுக்கு தருவேன் ஆனால் டன் கணக்கில் பிரச்சினை வைத்திருப்பவர்கள் இலவச சோதிடத்திலேயே அனைத்தையும் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள் அது கண்டிப்பாக சாத்தியப்படாது.

உங்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்றால் சும்மா பேசிபார்ப்போம் சரியாக வந்தால் செய்யலாம் இல்லை என்றால் அப்படியே போய்விடலாம் என்ற மாதிரியே உள்ளது.

பொதுவாகவே நான் யாரிடமும் மாட்டகூடாது என்பது விதி. ஏன் என்றால் உங்களின் கர்மாவின் படி உங்களின் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும் அதனை மாற்றும் வழியில் உள்ள என்னை தொடர்புக்கொள்வது என்பது மிகப்பெரிய சிக்கல் போலவே உங்களுக்கு இருக்கும்.

அவ்வளவு எளிதில் எதனையும் ஏற்றுக்கொள்ளகூடாது என்பது எங்களுக்கு குரு கொடுத்த வழி. அப்படி ஏற்றுக்கொண்டால் நாங்கள் வெற்றி பெறவேண்டும் என்பது மட்டுமே நியதி.

நான் உங்களை பார்த்தால் வேலை நடக்கும் அவ்வளவு தான் ஆனால் என்னை பலமுறை பார்க்க வேண்டும். ஏன் என்றால் குருவின் கட்டளை அப்படிப்பட்டது.அவனால் தொடர்ந்து நம்மோடு தொடர்பு வைத்துக்கொள்ளமுடிகிறது என்றால் அவனுக்கு யாரோ செய்த புண்ணியம் அவனுக்கு கிடைக்கிறது அவனை காப்பாற்ற கடவுள் அனுப்புகிறார் என்று அர்த்தம். செய் என்று சொல்லிவிடுவார்.

என்னிடம் ஒரு பழக்கம் இருக்கிறது நான் என்னிடம் வரும் நபர்களுக்கு அதிகம் பிரச்சினை இருக்கிறது என்றால் மூன்று முறை அவர்களை தொடர்புக்கொள்வேன் மூன்று முறைக்குள் அல்லது அதன் பிறகு அவர்கள் என்னை சந்திதார்கள் என்றால் என்னால் முடிந்ததை செய்வது உண்டு. அதிகப்பட்சம் யாரும் வருவதில்லை.

பெரிய பணக்காரர்கள் என்னை சந்திப்பது உண்டு அப்படி அவர்கள் என்னை நாடிவரும் பொழுது அவர்களிடம் முடிந்தளவுக்கு அவரை வைத்து செலவு செய்ய வைப்பேன். அவர்களும் செலவு செய்துக்கொண்டு இருப்பார்கள். பிடுங்கிவிடுவது உண்டு ஏன் இப்படி செய்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது. அவர் செய்யவேண்டும் அப்படி செய்து அவர் அலுத்துபோய் இனி நமக்கு இந்த இடம் ஒத்துவராது என்று முடிவெடுத்த செல்லும் நாள் வந்தவரின் நோக்கம் நிறைவேறும் நாளாக இருக்கும்.

ஏன் இப்படி செய்கிறேன் என்று சொல்லமுடியாது ஆனால் செய்யவேண்டும். இது எல்லாம் ஒரு சூட்சமும் அடங்கியிருக்கிறது. இந்த ஜாதககதம்பத்தில் இருந்து ஒரு பத்து பேர் இருக்கும் அவர்கள் மட்டும் தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர்கள். மீதி இருப்பவர்கள் வருவார்கள் போய்விடுவார்கள்.

உங்களின் பிரச்சினைக்கு விடிவு என்பது இங்கு இருக்கிறது ஆனால் உங்களின் கர்மாவின் கணக்கை மீறி என்னை தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு வரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: