Followers

Tuesday, January 21, 2014

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று ஒரு பெண்மணி என்னை தொடர்புக்கொண்டு பேசினார். அவருக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றது. அவர் என்னிடம் பேசும்பொழுது எனக்கு இவ்வளவு நோய்கள் இருக்கின்றது. நான் செய்யாத பரிகாரங்கள் கிடையாது எந்த வித முன்னேற்றம் இல்லை என்றார்.

இவர்கள் என்ன செய்வது என்றால் அனைத்து சோதிடர்களையும் பார்ப்பது அவர்கள் சொல்லும் பரிகாரங்களை எல்லாம் செய்வது வேலையாக இருக்கின்றனர். யாராவது ஒரு சோதிடர்களை பிடித்துக்கொள்ளுங்கள் போதும். சரியாக சோதிடர்களை தேடி தான் இவர்களின் பயணமும் இருக்கின்றது. என்ன செய்வது காலத்தின் கோலம்.

அவர் என்னிடம் பேசும்பொழுது சார் நீங்கள் கிரகங்களை மாற்றி கொடுங்கள் சார் என்று கேட்டார். எந்த நேரத்தில் இதனை எழுதினேன் என்று தெரியவில்லை இதற்கு தான் அதிகமான கால்கள் வருகின்றது. இந்த வேலை செய்வது எல்லாம் நீண்ட நாள்கள் உள்ள ஒரு பிராசசிங்.

முதலில் பெண்கள் என்பவர்கள் திருமணம் முடிந்துவிட்டால் உங்களின் கணவர் வழியாக வரும்பொழுது மட்டுமே ஒரளவு பிரச்சினையை சமாளிக்கமுடியும். உங்களின் கணவர் உங்களுக்கு எதிராக இருந்தால் எங்களால் ஒன்றும் முடியாத காரியம் இது.

இந்த வேலைக்கு எல்லாம் நாங்கள் உங்களோடு பல நாட்கள் பேசவேண்டும் ஒரு திருமண முடிந்த பெண்ணேடு ஒரு தடவைக்கு மேல் நாங்கள் பேசினால் அது தவறாக எடுத்துக்கொள்ளகூடும். நாங்கள் உங்களோடு பேசும்பொழுது மட்டும் எங்களின் அம்மன் உங்களின் ஆத்மாவில் உள்ள பிரச்சினை தீர்க்கும் அப்படி இல்லை என்றால் வேலை நடைபெறாது.

என்னோடு தொடர்பு வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் எல்லாம் தினமும் அவர்கள் என்னோடு பேசுவார்கள் காரணம் நான் தொடர்புக்கொண்டு பேசும் நபர்களை அம்மன் பார்க்கும். ஏன் இப்படி என்று கேட்டால் அம்மன் இருப்பது எங்களின் ஆத்மாவில் தான். தன் ஆத்மாவை நோக்கும்பொழுது மட்டுமே காரியம் வெற்றியடைகிறது.

இல்லறத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் பிராத்தணை மட்டுமே செய்யமுடியும். அனைத்தையும் வெற்றி அடையவேண்டும் என்றால் உங்களின் கணவரின் அனுமதி தேவைப்படும். அப்படி இல்லை என்றால் நான் பேசுவது கிடையாது.

ஒவ்வொரு கிரகத்தையும் செயல்பாட்டில் வித்தியாசம் காட்டும்பொழுது உங்களின் வாழ்க்கையை உற்று பார்க்கவேண்டும் நல்லது செய்கிறதா தீமை செய்கிறதா என்று பார்க்கவேண்டும் அப்படி பார்ப்பதற்க்கு உங்களோடு நான் தொடர்புக்கொள்ள வேண்டும் அல்லவா அதனால் தான் நான் உங்களோடு பேசவேண்டும் என்று சொல்லுகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: