Followers

Sunday, January 5, 2014

அம்மனின் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                    இந்த மாத அம்மனின் பூஜை 10 ஆம் தேதியில் வைக்கலாம் என்று நினைத்து இருக்கிறேன். வேண்டுதல் வைத்து அதனை அம்மன் நிறைவேற்றினால் நீங்கள் பூஜைக்கு பணம் அனுப்பலாம். 

உங்களுக்கு எல்லாம் ஒரு செய்தியை சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். மாதபூஜைக்கு பணம் அனுப்பவர்கள் வேண்டுதல் நடைபெற்றால் பணம் அனுப்புங்கள்.

பல நண்பர்கள் தனது ஆத்மதிருப்திக்கு பணம் அனுப்பவர்களாக இருக்கின்றனர் அவர்கள் அனுப்பலாம். ஆத்மதிருப்திக்கு பணம் அனுப்பவர்கள் நல்ல சம்பாதிப்பார்கள் அனுப்பலாம். ஒரு சில நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தன்னிடம் இருக்கும் பணத்தை அனுப்பிவைக்கின்றனர். இது தவறு.

மாத சம்பளம் ஏழு ஆயிரம் வாங்குபவர்கள் ஆயிரம் ரூபாய் பணத்தை எனக்கு அனுப்பினால் எப்படி நீங்கள் குடும்பம் நடத்தமுடியும். முதலில் உங்களுக்கு எல்லாம் சொல்லிக்கொள்ளுவது நீங்கள் கேட்பதை நான் செய்து தருகிறேன் நல்ல நிலைக்கு வந்த பிறகு நீங்கள் செய்துக்கொள்ளலாம். 

நேற்று பதிவை படித்துவிட்டு ஏகாப்பட்ட போன்கால்கள் எனக்கு வந்தது. அவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள் நல்ல நிலையில் இருப்பவர்கள் போன் செய்து எனக்கு அதனை செய்துக்கொடுங்கள். ஏதோ அவர்களுக்கு தகுந்த மாதிரி கேட்டார்கள். நல்லது ஆனால் ஒரு ஏழை மக்கள் கூட என்னிடம் போன் செய்து கேட்கவில்லை. 

ஏழைமக்கள் என்ன செய்கிறார்கள் பணத்தை அம்மனின் பூஜைக்கு போட்டுவிட்டு என்னுடைய பெயரை சொல்லாதீர்கள் என்று கேட்கிறார்கள். இந்த பதிவுக்கு வரும் கஷ்டப்படுபவர்கள் மற்றும் ஏழைமக்களை பற்றி எனக்கு அதிகம் தெரியும் அவர்களோடு நான் தொடர்புவைத்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

உங்களால் பணம் கொடுக்கும்நிலையில் இருப்பவர்களாக இருந்தால் நீங்கள் பணம் கொடுத்தால் மட்டுமே இங்கு வேலை நடக்கும் இல்லை என்றால் கண்டிப்பாக வேலை நடைபெறாது. உங்களைப்பற்றி எனக்கு தெரியாது அம்மனுக்கு தெரியும்.தேவையில்லாமல் வந்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.

கடுமையான தோஷம் உள்ளவர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் என்னை தொடர்புக்கொள்ளலாம். 
மருத்துவதுறையில் இருப்பவர்களுக்கு முற்றிலும் இலவசம்.

மாத வருமானம் இருபதாயிரத்திற்க்கு மேல் வருபவர்கள் கண்டிப்பாக பணம் கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு செய்யமுடியும். ஏன் இப்படி செய்கிறேன் என்பதற்க்கு பல காரணங்கள் இருக்கின்றது. அப்படி வரமுடியாது என்று நினைப்பவர்கள் அம்மனிடம் வேண்டுதல் வைத்துக்கொள்ளுங்கள் அது பார்த்து உங்களுக்கு நடத்திக்கொடுக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: