Followers

Tuesday, January 7, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே !
                    கிரகங்களை மாற்றுவதைப்பற்றி பழைய பதிவில் சொல்லிருந்தேன். அதில் உள்ள ஒரு சில கருத்துக்களை உங்களிடம் சொல்லுவதற்க்காக இந்த பதிவு.

நான் பெரும்பாலும் என்னிடம் வரும் நபர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களை மாற்றிவிட்டு தான் அவர்களுக்கு நல்லது செய்கிறேன். இதனை மாற்றுவது என்பது பிரம்மனின் விதியை மாற்றுவதற்க்கு சமமானது. அப்படி ஒரு விதியை மாற்றும் வேலையை ஒரு பிரம்மசாரி அதாவது சந்நியாசி மட்டுமே செய்யமுடியும். ஒருத்தர் சந்நியாசியாகிவிட்டால் மாற்றிவிடலாம் என்று கனவு காண்பதும் தவறு. அவர்கள் மிகப்பெரிய அளவில் ஆன்மீகத்தில் இருந்தால் மட்டுமே முடிகின்ற செயல் அது.

நான் இதனை செய்தாலும் நான் சந்நியாசி தீட்சை எல்லாம் வாங்கியது கிடையாது. அப்படி நடத்தும் பொழுது எனது செயல் அனைத்தும் எனது குருவை சேரும். குருவை முன் நிறுத்தி அதனை செய்கிறேன். மந்திரத்திலேயே குருவைப்பற்றி தான் வரும். பிரம்மனாக இருக்கும் குரு இதனை செய்கிறார் என்று அர்த்தம்.

கிரகங்களை மாற்ற தெரிந்தவனுக்கு மட்டுமே சாதனை செய்யமுடியும். நாம் என்ன தான் பரிகாரம் செய்தால் கூட ஒரு நேரத்தில் அது திரும்பிவிடும். நான் கிரகங்களை மாற்றும்பொழுது கூட ஒரு சில கிரகங்கள் என்னை ஏமாற்ற பார்க்கும். குரு மிகவும ஜாக்கிரதை ஏமாற்றிவிடபோகிறது என்று சொல்லுவார்.மிக சரியாக செய்ய வேண்டிய ஒன்று. 

நான் படித்த வித்தையை ஒரு சதவீதம் தான் ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன் மீதியை அப்படியே என்னுள்ளே வைத்திருக்கிறேன். எதனை செய்தாலும் அதற்கு என்று ஒரு விதி இருக்கின்றது. அவன் முன்ஜென்மத்தில் நல்லது செய்து இருக்கவேண்டும் இந்த ஜென்மத்திலும் நல்லது செய்யும்பொழுது என்னை நாடி வரும்பொழுது அவனுக்கு நடக்கும்.

நம்பினால் நம்புங்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: