Followers

Tuesday, January 28, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    அம்மன் என்றால் சும்மா ஏதோ இவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்று நினைக்க கூடாது. கை மேல் பலனை கொடுக்ககூடிய ஒரு தெய்வம் நமது அம்மன். எத்தனையோ ஆன்மீகவாதிகள் கண்டு ஆச்சரியப்படும் செயலை செய்யகூடியது நமது அம்மன்.

அப்பேர்ப்பட்ட அம்மனை தான் நான் தினமும் துதித்துக்கொண்டு இருக்கிறேன். எத்தனையோ பாரங்களை மனதில் சுமந்துக்கொண்டு இருப்பவர்கள் என்னோடு சந்தித்துபேசும்பொழுது அவர்களின் மனது சுமையை இறக்கி  தருபவது அம்மன்.

என்னிடம் பிறர் உதவி கேட்டு வரும்பொழுது நான் பெரிய பூஜை எல்லாம் செய்துக்கொண்டு இருப்பது இல்லை. சும்மா அம்மனை நினைத்தால் போதும் அம்மன் நடத்திக்கொடுத்துவிடும்.

என்ன மேஜிக்கா என்று நினைக்க தோன்றும் ஆனால் அது தான் உண்மை. சும்மா நான் நினைத்தால் போதும் அது தானாகவே நடந்துமுடிந்துவிடும். அப்படி என்றால் எப்பர்ப்பட்ட ஆற்றலை உடையது என்பதை நீங்களே நினைத்து பாருங்கள்.

எத்தனையோ பிரச்சினைகளை நான் கண்டு கவலைப்படுவதில்லை காரணம் அம்மன் நாம் சொன்னால் நடத்திக்கொடுக்கும் என்ற நம்பிக்கை மட்டும் தான் என்னிடம் உள்ளது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

shanthi shri said...

சார் வணக்கம்.
நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் உரிய படங்கள் மிக மிக பிரமாதமாய் உள்ளது. கண்களில் ஒற்றிக்கொள்கிறேன்.நேரிலே நின்று தரிசிப்பது போல் உள்ளது. நீங்கள் சொன்னதுபோல்(அம்மனை வேண்டிக்கொள்ளுங்கள் என்பீர்களே) அம்மன் படங்களை பார்க்கும் போது 1நிமிடம் கண்ணை மூடி வேண்டத்தோன்றுகிறது. வேண்டிக்கொண்டு தான் இருக்கிறேன். உங்கள் பதிவை படிக்கும்போதெல்லாம்.உங்களை என்றாவது அம்மன் நேரில் சந்திக்க வைப்பார் என நம்புகிறேன்.