Followers

Thursday, January 2, 2014

ஒரு சில வார்த்தைகள்


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் என்னை சந்திக்கும்பொழுது அவர்களின் பேச்சில் தென்படுவதை மற்றும் அவர்கள் சொல்லுவதை வைத்து பார்க்கும்பொழுது ஒரு விசயம் எனக்கு தென்ப்பட்டது. அதனைப்பற்றி உங்களுக்கு ஒரு சில செய்திகளை சொல்லவேண்டும் என்பதற்க்காக இந்த பதிவு.

ஏதாவது ஒரு சோதிடர் சொல்லும் வார்த்தை மட்டும் நீங்கள் பின்பற்றி வருவது நல்லது. அனைத்து சோதிடர்களிடமும் செனறு நீங்கள் சோதிடம் கேட்டு அனைத்தையும் பின்பற்றி வந்தால் உங்களின் வாழ்க்கை பிரச்சினையை மட்டுமே சந்திக்கும் என்பதில் எவ்விதம் ஐயம் இல்லை. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பரிகாரம் மற்றும் பலன்களை சொல்லிவருவார்கள். அனைத்தையும் நீங்கள் பின்பற்றினால் கடவுள் கூட குழம்பிபோய்விடுவார். உங்களுக்கு நல்லது நடைபெறாது.

அனைத்து சோதிட பதிவு மற்றும் ஆன்மீகபதிவையும் விடாமல் படிப்பதும் ஒரு பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி படிப்பது ஒன்றும் தவறு இல்லை ஆனால் படித்த அனைத்து விசயத்தையும் மனதில் போட்டு குழப்பிக்கொண்டால் பிரச்சினை மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடும். அனைத்தையும் படித்தாலும் தேவையானவற்றை மட்டும் உள்வாங்கவேண்டும் தேவையற்ற மேட்டர் எல்லாம் உள்வாங்கினால் பைத்தியம் பிடிக்குமே தவிர வேறு ஒன்றும் நடைபெறாது.

யார் என்ன சொன்னாலும் அந்த பரிகாரத்தை அப்படியே பின்பற்றுவதும் ஒரு தவறு தான். ஒவ்வொருவருக்கும் எப்படி ஜாதகமும் வித்தியாசப்படுகிறதோ அதேப்போல் பரிகாரமும் வித்தியாசப்படும். யாராவது ஒரு நபரை மட்டும் வைத்துக்கொண்டு அவர் சொல்லும் கருத்து பின்பற்றி வருவது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: