Followers

Wednesday, February 26, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 22


ணக்கம் ண்பர்களே!
                    என்ன தான் நாம பேசினாலும் நம்மை மக்கள் விடமாட்டார்கள் என்பது தெரிந்த ஒன்று. எப்படியாவது தன் பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று நினைப்பார்கள். ஒரு சிலர் இவன் போனால் போகட்டும் வேற ஆளை பார்த்துக்கொள்ளலாம் என்று போய்விடுவார்கள்.

நாம் என்ன தான் சாமியை கும்பிட்டாலும் ஒரு சில கர்மாவை ஆன்மீகவாதிகளை நாடி தான் குறைக்கமுடியும் அது விதி. ஒவ்வொரு ஆன்மீகவாதியையும் படைப்பதே அதன் நோக்கத்தால் மட்டுமே. மனிதன் வழியாக தான் மனிதனுக்கு தீர்வு கிடைக்கும்.

நான் இதனை கற்க நினைத்து ஒவ்வொருவரிடமும் சென்று நிற்கும் பொழுது அவர்களை என்னை படுத்திய பாடு அப்படிப்பட்டது. ஒன்றைப்பற்றி ஒருவர் கற்றுவிட்டால் அவர்கள் அவ்வளவு எளிதில் அதனை நமக்கு தந்துவிடமாட்டார்கள்.

அவர்கள் வெயிட் காட்ட ஆரம்பித்துவிடுவார்கள். நாம் என்ன செய்வது நமக்கு வயிற்றுவலி நின்று தான் ஆகவேண்டும். அப்படி தான் நான் கற்றேன். அவர்கள் செய்வதிலும் ஒரு நியாயம் இல்லாமல் இல்லை. அனைத்திற்க்கும் காரணம் என்பது இருக்கிறது

உங்களுக்கு சொல்லுவது எல்லாம் நன்றாக விசயம் புரிந்த ஆட்கள் அவ்வளவு எளிதில் இறங்கி வரமாட்டார்கள். ஒன்றும் தெரியாதவர்கள். கொஞ்சம் படித்தவர்கள் உடனே விலையை பேசி நான் செய்து தருகிறேன் என்று சொல்லுவார்கள்.

பொதுவாக சோதிடம் அனைவருக்கும் தெரியும் உங்களுக்கு பிரச்சினை அதிகமாக இருக்கின்றது என்று உங்களின் ஜாதகம் காட்டினால் கண்டிப்பாக பிரச்சினை நடக்காமல் இருக்காது. பிரச்சினையை நீங்களே தீர்க்க நினைக்கிறீர்களாக அல்லது ஆன்மீகவாதியை நாடி தீர்க்கிறீர்களாக என்பது தான் நீங்கள் எடுக்கும் முடிவாக இருக்கவேண்டும்.

நீங்களே தீர்க்கவேண்டும் என்று நினைக்கும்பொழுது நீங்களே பரிகாரத்தை செய்துக்கொள்வது நல்லது. அதுவும் அந்த பிரச்சினை நீங்கள் தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கும்பொழுது மட்டுமே. பெரிய பிரச்சினை என்று வந்தால் ஆன்மீகவாதியை நாடி தீர்த்துக்கொள்ளுங்கள்.

இப்பொழுது எல்லாம் மக்களுக்கு இருக்கும் வேலை பளு காரணமாக நல்ல ஆன்மீகவாதியை நாடி நீங்களே இதனை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். என்னிடம் தொழில் தொடர்புகள் வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் நான் இப்படி தான் செய்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு பிரச்சினை என்பது மலையளவு இருக்கின்றது என்று தெரியவந்தால் ஆன்மீகவாதி நாடுவது நல்லது. என்னையே தேடி வரவேண்டும் என்பது இல்லை. உங்களின் அருகாமையில் அவர் இருந்தால் மிகவும நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: