Followers

Wednesday, February 26, 2014

குரு தசா பலன்கள் பகுதி 91


ணக்கம் ண்பர்களே!
                    குரு தசாவில் ஒரு தகவலை பார்க்கலாம். குரு ஆறில் இருந்து தசா நடைபெற்றால் அந்த நபருக்கு அடிக்கடி ஜீரணகோளாறு ஏற்படும். அதே நேரத்தில் அந்த நபர் மந்திரங்களை கொண்டு எதிரியை வீழ்த்த நினைப்பார். 

எப்படிப்பட்ட நல்ல மனிதனும் நேர்வழியில் செல்லுவதைவிட குறுக்கு வழியில் செல்லுவதை அதிகம் விரும்புவான். மந்திரங்கள் என்ன தான் நல்ல வேலைக்கு பயன்படுத்தினாலும் ஒரு சில நேரங்களில் தவறான வழிக்கு பயன்படுத்தி தான் பார்ப்போமே என்று நினைப்பான்.

குரு கிரகம் ஒருவருக்கு ஆறில் இருந்தால் அந்த நபர் கற்கும் மந்திரங்கள் கூட அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மந்திரங்களாக தான் இருக்கும். மந்திரங்கள் தீங்கு விளைவிக்கிறதோ இல்லையோ இவர்கள் அதனை நம்பி கற்றுக்கொண்டு இருப்பார்கள்.

குரு கிரகம் ஆறில் நின்று வக்கிரமாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது மிக தீவிரமாக அவர்களுக்கு மந்திரங்கள் கற்றுக்க்கொள்ளமுடியும்.

குரு தசாவே மந்திரங்கள் மீது ஒரு தனிப்பட்ட விருப்பத்தை ஏற்படுத்தினாலும் இப்படிப்பட்ட வீட்டில் இருந்து குரு தசாவை நடத்தும்பொழுது இவ்வகையான மநதிரங்கள் மீது ஈடுபாடு அதிகரிக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: