Followers

Tuesday, February 11, 2014

கேள்வி & பதில்



கேள்வி
Kisshor kumar               
 உடல் கட்டு மந்திரம் என்று நான் ஒரு வலைத்தளத்தில் படித்தேன். அதில் சூர்யனுக்குரிய மந்திரத்தை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரயோகித்த பொழுது சூரியனின் காரகத்துவம் உடைய விஷயங்கள் எனக்கு எவ்வித தொந்தரவும் செய்ய வில்லை.இதை நவ கிரகங்களுக்கும் உச்சரித்து சித்தி செய்தால் நாம் மாபெரும் வெற்றி அடையலாம்.துன்பமில்லாத வாழ்க்கையும் வாழலாம்.

அந்த link ஐ நான் கீழே கொடுத்துள்ளேன்.

http://www.siththarkal.com/2010/12/blog-post_02.html

இதை பற்றிய மேலும் அறிவை தாங்கள் உபதேசிக்கும் படி கேட்டு கொள்கிறேன்.

பதில்

உங்களுக்கு நல்லது நடந்தால் நல்லது. பொதுவாக உடல்கட்டு என்பது ஒவ்வொரு கிரகத்திற்க்கு என்று போடமாட்டார்கள். உடல்கட்டு என்பது தன்னுடைய உடலை கட்டுவது. பிறர் தன்மேல் தேவையற்ற தீயசக்திகளை செலுத்தாமல் இருக்கவும். மிருகம் போன்ற கொடிய மிருகங்கள் தாக்காமல் இருப்பதற்க்கு போடுவார்கள்.

கிரங்களுக்கு கட்டு என்பது அந்த கிரகங்களின் வழியில் இருந்து வரும் கெடுதலை குறைப்பதற்க்காக போடுவார்கள். என்னை பொருத்தவரை நான் படித்தது எல்லாம் செய்முறையில் இருந்து தான் கற்றேன். 

புத்தகம் வழியாக கற்கவில்லை. கிரகங்களின் கட்டுக்கு மந்திரங்கள் இருக்கின்றன ஆனால் நீங்கள் சொன்ன இந்த மந்திரங்கள் கிடையாது. நான் தேடியவரை எனது குரு கொடுத்த மந்திரங்கள் இதுவரை எந்த புத்தகத்திலும் கிடைக்கவில்லை. புத்தகத்தில் உள்ள மந்திரங்கள் மாதிரி ஒரு வரி கூட குரு சொன்ன மந்திரங்களில் கிடையாது. குரு கொடுத்தது அனைத்தும் வித்தியாசமாக இருக்கின்றது.

நமது உடலுக்கு உடல்கட்டுக்கு மந்திரங்கள் கிடையாது. அது ஒரு முறைப்படி செய்வது. அதில் மந்திரங்கள் கிடையாது. கிரகங்களில் பாதிப்பில் இருந்து தப்பிக்க வழி இருக்கின்றது. கிரகங்களை கட்டுவது. கிரகங்களை மாற்றுவது. இதனை செய்வது என்பது ஒரு சாதாரண மனிதன் செய்யமுடியாது. 

மிகப்பெரிய குரு பரம்பரை அவனிடம் இருந்தால் மட்டுமே செய்யமுடியும். ஏன் என்றால் அந்த குருவை சாட்சியாக வைத்து தான் செய்யமுடியும். நேரிடையாக செய்கிறேன் என்று சென்றால் நாம் தப்பிக்கமுடியாது. என்னை கட்டுகிறாயா என்று நம்மை காலி செய்துவிடும் நிலை இருக்கின்றது.

அனைத்தையும் குருவிடம் இருந்து தான் கற்கவேண்டும். புத்தகங்களில் ஒழுங்கான சரியான தகவல்கள் கிடைக்காது. அனைத்தையும் மறைமுகமாக தான் எழுதுவார்கள். 

நான் ஜாதககதம்பத்தில் எழுதுகிறேன் என்று சொன்னால் நான் அனைத்து தகவலையும் சொல்லவில்லை. ஒரு பத்து சதவீதம் தகவலை மட்டும் தருகிறேன். மீதி உள்ள தகவலை மறைத்துவிடுகிறேன். அதனால் குருவை வைத்து அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
.



No comments: