Followers

Saturday, February 15, 2014

ஒரு சில வார்த்தை


வணக்கம் நண்பர்களே!
                   எனது குரு சொல்லுவார் எந்த வீட்டிற்க்கும் உடனே செல்லாதே போவதற்க்கு முன் ஒரு சில வேலைகளை செய்துவிட்டு போ என்பார். அது என்ன என்றால் ஒரு வீட்டிற்க்கு செல்வதற்க்கு முன் அம்மனை அந்த வீட்டிற்க்கு அனுப்பிவிடுவேன். அந்த வீட்டில் உள்ளவர்கள் எங்களுக்கு தகுந்தமாதிரி மாறிவிடுவார்கள். உங்களை சந்தித்துவிட்டு திரும்பியவுடன் எங்களோடு அம்மன் திரும்பிவந்துவிடும்.

நாங்கள் செல்லும் வீட்டில் எந்த சக்தியும் எங்களை எதுவும் செய்யமுடியாது. உங்களின் குலதெய்வமே எங்களுக்கு உதவி செய்துக்கொடுக்கும். அப்படி என்றால் நாங்கள் வைத்திருக்கும் சக்தியின் சக்தி எப்படி இருக்கும். இதனை எல்லாம் நான் செய்யாமல் வைத்திருந்தர்க்கு காரணம் இருக்கிறது.

ஒன்றும் தெரியாமல் இருப்பவர்களிடம் ஏன் நாம் நம்மை மிஞ்சிய சக்தியை அனுப்பவேண்டும். மனிதர்களுக்குள் மனிதர்களாகவே பேசலாம் என்று செய்துக்கொண்டிருந்தேன்.குரு சொன்னது எல்லாம் அப்படியே வாழ்க்கையில் நடைபெறுகிறது. அவர் கொடுத்த அனைத்து கைடும் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும்பொழுது பார்த்தால் அவரின் பேச்சை அப்படியே கேட்கவேண்டும் என்று நினைக்கிறேன். 

அக்னியை வளர்த்து அதன் முன் உட்காரவைத்து விடுவார்கள். குறைந்தது 700 நாட்கள் அதன் முன் காலை மாலை உட்காரவேண்டும். தினமும் செய்யவேண்டும். அது எதற்கு என்றால் அம்மனின் சக்தியை மேம்படுத்துவதற்க்காக அப்படி செய்ய சொல்லுவார்கள். நான் அப்படி செய்திருக்கிறேன். 

ஒரு இடத்தை சந்தோஷத்தோடு பார்த்தால் அந்த இடம் செழிக்கவேண்டும். கோபமாக பார்த்தால் அந்த இடம் பற்றி எரியவேண்டும். என்னை பொருத்தவரை இப்படிப்பட்ட குருவிடம் நீங்கள் பயின்றால் ஆன்மீகத்தில் கண்டிப்பாக முன்னேற்றம் அடைந்துவிடலாம். ஒரு நாள் நீங்கள் இப்படிப்பட்டவர்களிடம் படிப்பது ஒரு யுகம்போல் உங்களுக்கு தோன்றும்.

காயத்ரி மந்திரம் செய்பவர்களை எல்லாம் இப்பொழுது விட்டு வைத்திருக்கிறேன் என்றோ ஒரு நாள் கூப்பிட்டு என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள் இது வரை என்ன சக்தியை நீங்கள் மேம்படுத்தி இருக்கின்றீர்கள் என்று கேட்கபோகிறேன். அப்பொழுது தெரியும். என்னிடம் நல்ல வாங்கி கட்டிக்கொள்ளபோகிறீர்கள் ஒழுங்காக செய்யவும். கண்டிப்பாக சோதனை செய்வேன். ஜாக்கிரதை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: