Followers

Sunday, February 16, 2014

ஆன்மீக உழைப்பு


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு சில நண்பர்கள் என்னிடம் ஆன்மீகத்தை பற்றி பேசியே பொழுதை போக்குகிறார்கள். அது தவறு கிடையாது ஆனால் சந்தேகம் கேட்டுக்கொண்டே இருக்ககூடாது. செயலில் இறங்கவேண்டும். பேசினாலும் படித்தாலும் நாம் ஒன்றையும் அனுபவிக்கமுடியாது.

நான் காயத்ரி மந்திரத்தைப்பற்றி சொல்லி அதனை செய்ய சொல்லிருந்தேன். என்னை நம்பி பல நண்பர்கள் அதனை செய்து வருகின்றனர். அப்படி செய்துவரும் நண்பரகளுக்கு பல விதமான பயிற்சிகளை தரவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஏற்கனவே சொல்லிருந்தாலும் அதிகமான பயிற்சி கொடுத்து அவர்களை முன்னேற்றம் அடைய செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.

கொஞ்ச நாட்கள் இதனை செய்யுங்கள் என்று சொன்னதற்க்கு பல நண்பர்கள் நம்பிக்கையுடன் செய்தாலும் ஒரு சிலர் அதனை விட்டுவிட்டனர். காரணம் என்ன என்றால் ஒன்றுமே நடைபெறவில்லை என்று விட்டுவிட்டனர். கலியுகத்தில் ஒருவர் ஆன்மீகத்தின் பக்கம் செல்வதே மிகப்பெரிய புண்ணியம் செய்திருக்கவேண்டும் அதில் ஒருவர் அனுபவிக்கவேண்டும் என்றால் கொஞ்ச நாள் பயிற்சி செய்தால் தான் கிடைக்கும்.

நான் எடுப்பதற்க்கு எல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று ஏற்கனவே பல பதிவுகளில் சொல்லிருக்கிறேன். ஒரு தெய்வம் நம்மிடம் வருகிறது என்றால் அவ்வளவு எளிதில் வந்துவிடாது உழைப்பு வேண்டும். அந்த உழைப்பை போட்டால் கண்டிப்பாக நாம் வெற்றி பெற்றுவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: