Followers

Tuesday, February 18, 2014

அம்மன் தரும் வாய்ப்பு


ணக்கம் ண்பர்களே!
                    நான் தங்கியிருக்கும் அறையிலேயே இருப்பதால் பல விசயங்களை இப்பொழுது தான் என்னால் உணரமுடிகிறது. அம்மன் ஒரு விசயத்திற்க்கு தயார்படுத்துகிறது என்றால் அதில் பல விசேஷம் இருக்கும் என்றும் தெரியும். பல உண்மைகளை இப்பொழுது தான் கண்டுபிடிக்கமுடிந்திருக்கிறது. பின்வரும் நாளில் அது என்ன என்று சொல்லுகிறேன்.

ஒரு மனிதரிடம் நான் பழக்கம் வைத்திருந்தால் அந்த மனிதர் எங்களை விட்டு போகிறார் என்றால் நான் உடனே விட்டுவிடுவது உண்டு அவரை இழுத்துபிடித்துக்கொண்டு வைத்திருப்பதில்லை. அவர்களின் கர்மா அவரை பிரிக்கிறது அதில் ஏன் நான் போய் தலையிடவேண்டும் என்று விட்டுவிடுவது உண்டு.

குருவே சொல்லுவார் போகின்ற ஆளை விட்டுவிடு அவர்களை இழுத்துபிடிக்காதே என்பார். அடுத்த நிமிஷத்தில் அவர்களுக்கும் எனக்கும் தொடர்பு இல்லாதவர்கள் போல் நடந்துக்கொள்வதும் உண்டு. நீங்கள் என்ன இப்படி இருக்கிறார் என்று நினைக்கதோன்றும். நான் யாரிடம் பழக்கம் வைத்திருக்கிறோனோ அவர்களை தான் அம்மன் பார்க்கும்.

உங்களுக்கு ஏதாவது செய்வது என்றால் அதிகம் பூஜைகளை விரும்புவதில்லை. சும்மா நாங்கள் நினைத்தால் போதும் உங்களுக்கு காரியம் வெற்றி பெற்றுவிடும். ஒரு சில பெரிய விசயங்களுக்கு தான் பூஜை எல்லாம் தேவைப்படும்.

குரு சொல்லுவார் நாம் வாழும் வாழ்க்கை என்பது வேறு மக்கள் வாழும் வாழ்க்கை என்பது வேறு. தேவையில்லாமல் அவர்களை தொந்தரவு செய்யகூடாது என்பார்.நான் ஒரு வாய்ப்பை தருகிறேன் அதனை பயன்படுத்தினால் நீங்கள் நன்றாக மேம்படலாம். தவறவிட்டால் நான் பொறுப்புகிடையாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: