Followers

Wednesday, February 26, 2014

வாழ நினைத்தால் வாழலாம்


வணக்கம் நண்பர்களே!
                    நான் நிறைய கஷ்டப்பட்டு எழுதியது எதற்க்கு என்றால் அதனை படித்துவிட்டு புரிந்துக்கொண்டு வாழ்க்கையில் மனிதன் முயற்சித்தால் எதனையும் அடையமுடியும் என்பதை காட்டுவதற்க்கு தான் எழுதுகிறேன். ஒரு சில நண்பர்கள் சோதிடபதிவை படித்துவிட்டு நமக்கு இப்படி தான் விதி என்று உட்கார்ந்துக்கொண்டு இருக்கின்றனர். அது தவறு,

இன்று காலையில் ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு பேசினார். அவருக்கு ராகு தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது அதனை பார்த்த சோதிடர்கள் உனக்கு திருமணம் நடைபெறாது என்று சொல்லிவிட்டனர். அவரும் அதனை நம்பி இருக்கிறார்.

இந்தியாவில் முக்கால்வாசி ஜாதகத்திற்க்கு திருமண தோஷம் இருக்க தான் செய்யும். அவர் அவர்கள் கஷ்டப்பட்டு திருமணத்தை நடத்திக்கொள்கிறார்கள். தன்னுடைய ஆன்மீகபலத்தால் அனைத்து தடையையும் மீறி வெற்றி பெறுகிறார்கள். அப்படி எடுத்துக்கொண்டு திருமணத்தை ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டியது தான்.

தோஷம் ஒரு பக்கம் இருக்கட்டும் என்று விட்டுவிட்டு தன் முயற்சியால் செய்யவேண்டியது உங்களின் பொறுப்பு அப்படி இல்லை நீங்கள் கிரகத்தோடு சேர்ந்து நீங்களும் வீணாக போய்விடுவீர்கள்.எப்பேரபட்ட தோஷத்திற்க்கும் ஒரு மாற்று ஏற்பாடு உண்டு என்பதை அறியுங்கள். அந்த மாற்று ஏற்பாட்டை ஏற்படுத்திக்கொண்டு வாழவேண்டியது தான். மனிதன் நினைத்தால் வாழமுடியும் என்பதை காட்டுவதற்க்கு தான் ஜாதககதம்பம் வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

A. Anitha said...

ஜாதகத்தில் உள்ள குறைகளால் நொந்து நூலான நெஞ்சங்களுக்கு ஊக்க மருந்தான கட்டுரை.
ஒவ்வொரு ஜோதிடரும் இந்த வழியை பின்பற்றினால் எந்த பெண்ணும் கண் கலங்க மாட்டாள்.

rajeshsubbu said...

வணக்கம் தங்களின் வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி