Followers

Monday, February 3, 2014

அம்மனின் பூஜை


ணக்கம் ண்பர்களே!
                   இன்றைய மாதம் அம்மனின் பூஜை வரும் 10 ஆம் தேதிக்குள் நடைபெறும். இதுவரை வேண்டுதல் வைத்து நடைபெற்றவர்கள் உங்களால் முடிந்த உதவி செய்யலாம். பல நண்பர்கள் அம்மன் இருக்கும் கோவிலுக்கு வருகிறேன் என்று சொல்லுகிறார்கள். நீங்கள் வருவதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் நீங்கள் கடன் வாங்கிக்கொண்டு வந்து சாமி தரிசனம் செய்யவேண்டும் என்பது கிடையாது.

கடன் வாங்கியாவது நம் ஆட்கள் சாமி கும்பிட நினைப்பது கடவுள் மேல் உள்ள பக்தியை காட்டுகிறது. என்னை பொருத்தவரை நீங்கள் வேண்டுதல் வைத்து அது நடைபெறும் காலத்தில் உங்களின் வாழ்க்கை தரமும் உயரும்பொழுது நீங்கள் கண்டிப்பாக வரலாம்.

உங்களை நான் கூப்பிட்டு கடன் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு வரும்பொழுத அதில் உள்ள பாவம் கூட என்னை சேரும். நீங்கள் இருந்த இடத்தில் இருநது வேண்டுதல் வைத்து உங்களின் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ளுங்கள் அதன் பிறகு கோவில் தரிசனத்தை வைத்துக்கொள்ளலாம்.

நான் பதிவில் அம்மனின் பூஜையை போடுவதற்க்கு முன்பே பல நண்பர்கள் பணத்தை அனுப்பிவிட்டனர். அம்மனின் சக்தியை உணர்ந்தவர்கள் அவர்கள். அவர்களின் பங்களிப்பு மகத்தானது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: