Followers

Wednesday, February 5, 2014

கேள்வி & பதில்


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு நண்பர் இந்து அல்லாத வேறு மதத்தில் இருப்பவர்கள் எப்படி இந்த சக்தியை எடுக்கிறார்கள் என்று ஒரு நண்பர் கேட்டுருந்தார். அவரின் கேள்விக்கு பதில்

முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும். அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்தில் இருக்கின்றது என்று சொல்லுவார்கள். தன்னை உணர்ந்தலே ஆன்மீகம். வெளியுகத்தில் தேடினால் ஒன்றும் கிடைக்காது. தன்னை தேடும்பொழுது வெளி உலகத்தில் இருக்கும் சக்தியை நீங்கள் அடையாளம் கண்டுக்கொள்ள முடியும்.

இதில் மதங்கள் சொல்லுவது எல்லாம் நிறைய இருந்தாலும் தன்னை உணர்ந்துவிட்டால் போதும் மற்றவை அதுவாகவே வரும். முதலில் நாம் கோவில்கள் எல்லாம் சுற்றலாம் அதன் பிறகு ஒவ்வொரு சக்தியும் எடுக்கும்பொழுது உங்களுக்கு அனைத்தும் புரியும்.

எங்கிருந்து சக்தியை எடுக்கிறார்கள் என்றால் தன் ஆத்மாவில் இருந்து தான் அனைத்து சக்தியையும் எடுக்கிறார்கள். தன் ஆத்மாவை பார்க்கும் திறமை வந்துவிட்டால் போதும். அந்த ஆத்மாவில் என்ன இருக்கின்றது என்று தெரியும். இதனை எல்லாம் சொன்னால் புரியாது. அனைத்தையும் உணர்ந்து தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

மதத்தை எல்லாம் விட்டுவிட்டு தன் ஆத்மா என்றால் என்ன என்று தேடஆரம்பித்தால் உங்களுக்கு அடுத்து வரும் கேள்விகள் எல்லாம் புரியும். தன்னை உணரவில்லை என்றால் வெளியுகத்தில் தேடிக்கொண்டிருக்கவேண்டியது தான் ஒருநாளும் முழுமை பெறமுடியாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: