Followers

Thursday, February 27, 2014

சிவன் இல்லை சக்தி இல்லை


வணக்கம் நண்பர்களே!
                    நான் என்ன தான் அம்மன் என்று புகழ் பாடினாலும் சிந்தனையில் சிவனை வைத்தால் தான் வேலை நடக்கும் நாமும் நன்றாக இருக்கமுடியும். 

சிவன் இல்லை என்றால் சக்தி இருக்காது. ஒரு நாளும் நம்மிடம் இருக்காது. எப்பேர்ப்பட்ட அம்மன் கோவிலாக இருந்தாலும் அந்த கோவிலில் ஒரு சிவன் வேறு வடிவில் இருப்பார். அவர் அங்கு இருப்பதால் தான் சக்தி அந்த இடத்தில் இருக்கும்.

ஒரு சில நண்பர்கள் கூட என்னிடம் கேட்டார்கள் என்ன சார் அம்மன் அம்மன் என்று சொல்லுகிறீர்களே சிவனை கும்பிடமாட்டீர்களா என்று கேட்டார். சிவனை கும்பிடுவோம் அதே நேரத்தில் எந்த நேரமும் அம்மனை துதிக்கும்பொழுது அம்மனோடு தான் அப்பன் இருப்பார். அந்த காரணத்தால் அம்மனை துதிப்பது வழக்கம்.

இதனை எல்லாம் இப்படி தான் செய்யவேண்டும் என்று எங்களின் ஆதிகுருவின் வழிகாட்டுதலின் படி நடப்பதால் ஒரு சிஸ்டம்போல் இருக்கும்.வெகு எளிதாக அனைத்தையும் அடையமுடியும்..சிவன் இல்லாமல் சக்தி மட்டும் தனியாக எங்களிடம் இருக்காது. அம்மனை கும்பிட்டாலும் மனதில் சிவனையும் துதித்து வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: