Followers

Thursday, February 6, 2014

சோதிட அனுபவம்


ணக்கம் ண்பர்களே!
                    நமது பதிவை படிக்கும் ஒருவர் என்னிடம் வந்து அவர் மகன் மற்றும் மருமகளின் ஜாதகத்தை காண்பித்தார். அதனை பார்த்துவிட்டு மனதிற்க்குள் நினைத்துவிட்டேன். இருவரும் சேர்ந்து வாழ்வதற்க்கு வாய்ப்பில்லை என்று தோன்றியது. நாம உடனே சொல்லகூடாது என்று நினைத்துவிட்டு பலனை சொன்னேன்.

கடைசியில் அவர் விவாகாரத்து ஆகிவிட்டது என்றார். அவர் என்ன நோக்கத்திற்க்காக வந்திருந்தார் என்றால் இருவரையும் மீண்டும் இணைக்கலாம். அதற்கு உங்களின் உதவி வேண்டும் என்று கேட்டுவந்தார். அந்த பெண்ணின் ஜாதகத்தை பார்த்துவிட்டு இந்த பெண்ணை மீண்டும் இணைப்பது என்பது முடியாத காரியம் என்று சொன்னேன். அந்த பெண்ணின் ஜாதகம் அப்படிப்பட்டது. என்ன தான் தலைகீழ் நின்றாலும் ஒன்றும் செய்யமுடியாது.

இருவரும் விவாகாரத்து பெற்ற பிறகு என்ன செய்யமுடியும் என்பது இல்லை. பெண்ணின் ஜாதகத்தில் ஏகாப்பட்ட தோஷம் அதனை திரும்பி கொண்டுவந்து ஒன்றும் செய்யப்போவதில்லை. பெண்ணாகவே பிரிந்து சென்றது நன்றாக போய்விட்டது. வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வையுங்கள் என்று சொன்னேன்.

பெண் நன்றாக இருக்கிறது அதனால் சேர்த்து வைக்கலாம் என்று நினைத்தேன் என்றார். சேர்த்து வைத்தாலும் அதனை எல்லாம் சரி செய்துக்கொண்டு வருவதற்க்கு பல மாதங்கள் சென்று விடும். ஒரு சில ஜாதங்களை நாம் என்ன தான் போராடினாலும் ஒன்றும் செய்யமுடியாது. அது பட்டு தான் திருந்தும். அடி வாங்காமல் அதனை சரிசெய்யமுடியாது.

பெண்களின் ஜாதகத்தில் சுக்கிரன் கிரகம் நன்றாக இருக்கவேண்டும். சுக்கிரன் அடிப்பட்டால் பிரச்சினையை அதிகம் சந்திக்கிறது. அதே நேரத்தில் சந்திரனும் நன்றாக இருக்கவேண்டும். அதன் பிறகு தான் அடுத்த கிரங்கள் எல்லாம்.இது பொதுவான தகவல் .

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: