Followers

Tuesday, February 11, 2014

அன்பான அறிவிப்பு



ணக்கம் ண்பர்களே!
                    காயத்ரி மந்திரம் செய்பவர்களுக்கு என்று பல விதத்தில் நான் ஆலோசனை சொல்லிருந்தாலும் அவர்களில் தொடர்ந்து பல மாதங்கள் செய்துக்கொண்டு வருகிறீர்கள் உங்களுக்கு என்று மேலும் ஒரு சில விசயங்களை சொல்லுகிறேன்.

பல மாதங்கள் இதனை செய்துவருபவர்களுக்கு என்று ஒரு சில விசயங்கள் நான் தனிப்பட்ட முறையில் சொல்ல உள்ளேன். அவர்கள் என்னை தொடர்புக்கொண்டு கேட்டு கொள்ளலாம். இதில் ஒரு சிலர் ஒரு வருடம் முழுவதும் செய்துக்கொண்டு இருப்பார்கள் அவர்களும் என்னை தொடர்புக்கொள்ளலாம்.

முடிந்தால் என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசலாம். அலுவலகம் தயார் செய்தவுடன் சொல்லுகிறேன் என்னை வந்து சந்தியுங்கள். இது எனக்காக கூட்டம் கூட்டவேண்டும் என்ற காரணம் இல்லை. ஒரு சில ஆன்மீக செய்திகளை உங்களுக்கு சொல்லவேண்டும் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

என்னிடம் சோதிடம் பார்ப்பவர்களுக்கு கூட நான் சொல்லும் செய்தி கொஞ்ச நாள் சென்றபிறகு பார்க்கலாம் என்று சொல்லுவேன் அதற்கு காரணம் இவர்கள் என்னை நம்பியே உள்ளார்களா என்று பார்ப்பதற்க்கும் அவர்களின் கர்மா என்னிடம் இருந்து பிரிக்கிறதா என்று சோதனை செய்வதற்க்கு மட்டுமே அப்படி செய்வது உண்டு. 

ஒரு சிலர் என்னிடம் பல ஆண்டுகள் தொடர்பில் இருப்பார்கள் ஆனால் ஒரு சிலர் ஒரு மண்டலம் கூட தொடர்பில் இருக்கமுடியாது. அது அது கர்மா மற்றும் அவர்களின் புரிதல் நிலையாக கூட இருக்கலாம்.

நான் பூர்வபுண்ணியத்தைப்பற்றி எழுதியவன் அதனால் இப்படி நான் செய்வது உண்டு. ஒரு சோதிடனாக இருந்தால் நான் சோதிடத்தை பார்த்தவுடன் இவ்வளவு பணம் ஆகும் என்று சொல்லிவிட்டு பரிகாரத்தை செய்துவிட்டு அனுப்பிவிடலாம். எனது நோக்கம் அது அல்ல.

என்னுடைய பூர்வபுண்ணியதோடு நீங்கள் பல பேர் தொடர்பு உடையவர்களாக இருக்கும்பட்சத்தில் அது என்னுடைய குடும்பம் போல் அவர்களை காப்பாற்றவேண்டும் என்று எண்ணி செய்வேன். பல பேர் அப்படி இருக்கின்றார்கள்.

பூர்வபுண்ணிய தொடர்பு உடையவர்கள் என்னை விட்டு போவதில்லை. நான் எவ்வளவு பேசினாலும் அவர்கள் என்னை தேடி வருவார்கள் அவர்களுக்காக நான் பல விசயங்களை செய்கிறேன்.

படிப்பவர்கள் அதிகம் பேர் இருந்தாலும் பூர்வபுண்ணியத்தோடு தொடர்பு உடையவர் அப்படியே என்னிடம் இருக்கின்றார்கள். அந்த ஒரு காரணத்தால் மட்டுமே அவர்களை காப்பாற்ற இறைவன் என்னிடம் அனுப்புகிறான் என்று எண்ணி செய்துக்கொடுக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


2 comments:

Anonymous said...

விரைவில் உங்கள் மனம் போல் ஒரு நல்ல அலுவலக இடம் அமைய
என் வாழ்த்துக்கள். ' adyar times ' விளம்பரம் பாருங்கள். இல்லையென்றால்
தன் வீட்டின் முன் அறையைக் கூட யாராவது ஒதுக்கித் தர முன் வரலாம்.

rajeshsubbu said...

நன்றி. நிறைய அலுவலகம் வருகிறது. எனக்கு ஏற்றார்போல் அமையவேண்டும் என்பதால் தாமதப்படுத்துகிறேன்.