Followers

Tuesday, February 18, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு போட்டி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த போட்டியில் என்ன தான் திறமை இருந்தாலும் அதில் ஒருவர் வெற்றி பெறுவதற்க்கு நம்மை நாடுகிறார் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது அவருக்கு நாம் செய்யும் ஒரு செயலைப்பற்றி சொல்லுகிறேன்.

பத்து பேர் அதில் கலந்துக்கொண்டால் ஒருத்தர் மட்டும் நம்மை நாடும்பொழுது அந்த நபருக்கு வேண்டுதல் மட்டும் அம்மனிடம் வைத்தால் அவரின் திறமை மற்றும் அந்த நேரத்தில் அவரின் நல்ல நேரம் இருந்தால் வெற்றி பெறலாம். அதே நேரத்தில் சிறப்பாக அவர் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று வந்தால் அப்பொழுது நமக்கு வேலை அதிகம்.

கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்றால் மீதி இருக்கும் ஒன்பது பேரையும் கவிழ்க்கவேண்டும். ஒன்பது பேரின் குலதெய்வம் அதற்கு இடம் தராது. நாம் அப்பொழுது அந்த ஒன்பது பேரின் குலதெய்வத்தின் அருளை தடைசெய்யவேண்டும்.அது எல்லாம் பிரச்சினையை தரும் விசயமாக தான் இருக்கும்.

இத்தனை வேலை செய்து சம்பந்தப்பட்ட நபரை வெற்றி பெறவைக்கவேண்டும். இதனை செய்தால் கர்மம் ஏற தான் செய்யும்.கர்மத்தை ஏற்றி வெற்றி பெற்றால் அந்த கர்மம் உங்களை கொஞ்சகாலத்தில் கவிழ்த்துவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: