Followers

Sunday, February 9, 2014

சோதிட அனுபவம்



வணக்கம் நண்பர்களே!
                    என்னை தேடி ஒரு நபர் தேடி வந்தார். அவர் நல்ல வசதியான ஆள். அவருக்கு பிரச்சினை அதிகமாக இருந்தது. பணம் பிரச்சினையில்லை ஆனால் கம்பெனியில் பிரச்சினை அதிகம் இருந்தது. அவர் பல கோடிகள் பணம் வைத்திருப்பார் என்று தெரிந்தது. இப்பொழுது எல்லாம் பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் அதிகம் பிரச்சினை இருக்கிறது. பணம் தவிர மீதி அனைத்தும் பிரச்சினையாக இருக்கிறது.

அவரிடம் உங்களின் பிரச்சினைக்கு ஒரு பரிகாரம் செய்யவேண்டும். எனக்கு ஒரு இன்னோவா கார் ஏற்பாடு செய்து தாருங்கள். தமிழ்நாட்டில் இருக்கும் முக்கியஸ்தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வரவேண்டும். நீங்களும் என்னோடு வாருங்கள் என்று சொன்னேன். பயணம் அதிகப்பட்சம் நான்கு நாளுக்கு இருக்கும் அதனால் அதற்கு தகுந்தமாதிரி நீங்கள் வாருங்கள். வந்தவுடன் உங்களின் பிரச்சினை போய்விடும் என்றேன்.

உங்களால் வேலை அதிகமாக இருக்கும் என்று நினைத்தால் காருக்கும் செலவுக்கும் பணம் கொடுத்துவிடுங்கள். எனது நண்பர்கள் இருக்கின்றனர் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டு வருகிறேன் என்று சொன்னேன்.

அவர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். சார் நீங்கள் என்ன இப்படி சொல்லுகின்றீர்கள் நீங்கள் பணம் மற்றும் எதுவும் எதிர்பார்க்க மாட்டீர்கள் என்று சொன்னார்கள். வேலை முடித்துவிட்டு தான் பணம் கேட்பீர்கள் என்று சொன்னார்கள். 

சார் அனைத்தும் உண்மை தான் ஆனால் உங்களை போல் ஆளுக்கு இது சரிப்பட்டு வராது. நீங்கள் இது எல்லாம் செய்யதால் மட்டுமே உங்களுக்கு காரியம் வெற்றி பெறும்.

ஏன் சார் இப்படி சொல்லுகிறீர்கள் நான் அப்படி என்ன செய்தேன் என்றார்.

ஏன் சார் இப்படி சொல்லுகிறீர்கள் நான் அப்படி என்ன செய்தேன் மற்றும் நீங்கள் ஊரில் உள்ள கோவிலுக்கு எல்லாம் நீங்கள் மற்றும் உங்களின் நண்பர்கள் செல்லுவதற்க்கு கார் கேட்கிறீர்களே என்றார்.

நானும் எனது நண்பர்களும் ஜாலியாக ஊர் சுற்றுவதற்க்கு தான் கார் கேட்கிறேன். உங்களின் பாவத்தை நான் எடுக்கவேண்டும் என்றால் நான் அதற்கு செலவு செய்யவேண்டும். அந்த பாவத்தை நான் எங்கு சென்று வைப்பது. முதலில் நீங்கள் செய்துக்கொண்டிருக்கிறீர்களே அது உங்களுக்கு தொழில் கிடையாது. உங்களை குனியவைக்க இந்த தொழிலை கிரகங்கள்  இழுத்துவிட்டுவிட்டது என்றேன். அதனை நான் மாற்ற வேண்டும் என்றால் அதற்கு பணம் தேவை.

நீங்கள் கிளம்பி சென்று ஊரில் நிறைய பேர் இருக்கின்றனர் அவர்களிடம் உங்களின் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

நண்பர்களே என்னடா இப்படி எழுதுகிறாரே என்று நினைக்கதோன்றும். நாம் எங்கு சென்று கீழே விழுவோம் என்பதை காட்டும் இடம் பனிரெண்டாம் வீடு அந்த வீட்டில் உள்ள கிரகங்களின் காரத்துவம் காட்டும் இடங்களில் நாம் செய்யும் தொழிலில் உள்ள பணத்தை எல்லாம் கொண்டு சென்று விட்டுவிட்டு வருவோம் அது நடைபெறகூடாது என்று சொன்னால் நாம் நாமே ஊரை சுற்றி பார்த்துவிட்டு வரவேண்டும். யாத்திரை மற்றும் கோவில் குளங்களை காட்டும் இடமும் அது. அங்கு சென்று நாம் செலவு செய்து வந்தால் இப்படிப்பட்ட செலவை நாம் குறைக்கமுடியும்.

சம்பந்தமே இல்லாமல் பணத்தை விரையம் செய்யும் வீட்டின் உள்ள கிரகங்களை பார்த்து அதற்கு தகுந்தார்போல் உங்களின் தொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அந்த தொழில் பக்கம் நாம் தலைவைத்து படுக்ககூடாது.

நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: