Followers

Saturday, March 8, 2014

ஆன்மீக அனுபவங்கள் 156


வணக்கம் நண்பர்களே!
                     ஆன்மீக அனுபவங்கள் பார்த்து நீண்ட நாட்கள் சென்றுவிட்டது இன்றைய பதிவில் ஒரு தகவலைப்பற்றி பார்க்கலாம்.

ஒரு நண்பர் ஒரு நாள் எனக்கு போன் செய்து ஆத்மாவை பார்க்கவேண்டும் உடனே சொல்லுங்கள் என்று கேட்டார். அவருக்கு அனைத்தையும் புரியவைத்து உடனே எல்லாம் பார்ப்பது போல் இருந்தால் மனிதன் அனைத்தையும் சாதித்துக்கொள்வான் அல்லவா. அதற்கு என்று பல காலங்கள் தவம் இருக்கவேண்டும் அல்லவா என்று சொன்னேன். ஒரு சி்ன்ன கருத்தைவைத்து உங்களுக்கு புரியவைக்கிறேன் படித்து பாருங்கள்.

                    வெளி உலகத்தை நாம் பார்ப்பதற்க்கு கண் இருந்தாலும் நாம் கண்கள் இல்லாமல் பார்க்கவும் செய்கிறோம். நாம் உறங்கும்பொழுது நமது கண் இமை மூடி தான் இருக்கின்றது ஆனால் நாம் கனவு வழியாக பல விசயங்களை பார்க்கமுடிகிறது என்றால் நமக்கு கண்கள் இல்லாமல் பார்க்ககூட முடியும் என்பது தெரிகிறது.

பார்வை மட்டும் கிடையாது. மூக்கு வழியாக நுகர்வது எல்லாம் கூட தூங்கும் நேரத்தில் நடைபெறுகிறது என்றால் நமக்கு இந்த புலன்கள் இல்லாமல் கூட இந்த புலன்கள் செய்யும் வேலையை நாம் வேறு ஒன்றின் வழியாக செய்யமுடியும் என்று தெரிகிறது.

இது எல்லாம் எப்படி சாத்தியம் என்று நினைத்தால் அது தாங்க ஆத்மா. உங்களின் ஆத்மாவிற்க்கு அந்த மாதிரியான திறமை இருக்கின்றது என்று அர்த்தம். உங்களின் ஆத்மாவை வைத்து இந்த உலகத்தில் என்ன என்ன நடைபெறுகிறது. எங்கு என்ன இருக்கின்றது என்பதைப்பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும்.கொஞ்சம் கஷ்டப்படவேண்டும்.

புலன்கள் இல்லாமல் அனைத்தையும் செய்யும் ஒரு கருவி இருக்கின்றது என்றால் அது தான் ஆத்மா. ஒரு சில காலங்களில் நான் ஒரு சில பயிற்சி செய்து பார்த்திருக்கிறேன் அதனை உங்களிடம் சொல்லுகிறேன். உங்களுக்கு முடிந்தால் செய்து பாருங்கள். 

நான் என்ன செய்வேன் என்றால் நியூஸ் பேப்பரை வாங்கி வந்து எனது அறையில் வைத்துவிட்டு உடனே படுத்துக்கொண்டு கண்களை மூடி கொஞ்ச நேரம் அப்படியே கண்களை மூடிக்கொண்டே படுத்து இருப்பேன். சிறிது நேரம் சென்றபிறகு அந்த நியூஸ் பேப்பரில் இருக்கும் விசயம் என்ன என்று எனக்கு தெரியும். 

நீண்ட நேரம் சென்ற பிறகு அந்த நியூஸ் பேப்பரை எடுத்து பார்த்தால் நான் பார்த்த அனைத்தும் அப்படியே அந்த நியூஸ் பேப்பரில் இருக்கும். என்னடா இப்படி கதை விடுகிறார் என்று நினைக்காதீர்கள். ஆன்மீகவாதியாக இருந்தால் இந்த தகவல் அற்புதமான ஒரு தகவல் என்று புரியும். நீங்களே செய்து பார்க்கலாம் இது தான் நாம் ஆத்மாவை உணர்வதற்க்கான ஒரு வழி. 

ஒருவன் ஆன்மீகவாதியாக உடனே மாறிவிட முடியாது. படிப்படியாக தான் மாறமுடியும் நீங்களும் இதனை செய்து பாருங்கள். முதலில் தலைப்பை படிக்கமுடிகிறதா என்று பாருங்கள். நினைத்த நேரம் நாம் இப்படி செய்யமுடியாது. கடுமையான பயிற்சி செய்தால் செய்யமுடியும். எப்பொழுதாவது செய்வது எப்பொழுதாவது மட்டுமே படிக்கமுடியும். அடுத்த பதிவில் வேறு ஒரு வழியை சொல்லி தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: