Followers

Thursday, March 13, 2014

பிரச்சினையும் தீர்வும் பகுதி 23


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் வரும் பல நண்பர்கள் எனக்கு செய்வினை வைத்துவிட்டார்கள் அல்லது மாந்தீரிக பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கொண்டு வருகிறார்கள். நாம் பலமுறை சொல்லிவிட்டேன் இப்படி செய்பவர்களை நீங்கள் நாடிச்செல்லாதீர்கள் என்று சொல்லி இருக்கிறேன்.

ஒருவரும் கேட்பதில்லை மறுபடி மறுபடி சென்று மாட்டிக்கொள்கிறார்கள். நாம் உண்டு நமது வேலை உண்டு நமது குடும்பம் உண்டு என்று இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வரபோவதில்லை அடுத்த குடும்பத்தில் நீங்கள் தலையிடும்பொழுது தான் இப்படிப்பட்ட பிரச்சினை வருகிறது.

இப்பொழுது எல்லாம் பணம் மீது அதிக மோகம் அனைவருக்கும் வந்துவிட்டது அதனாலேயே பல பேர்கள் இப்படிப்பட்ட வேலைகளை எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

சரி இதற்கு தீர்வு என்ன என்றால் உங்களின் வீட்டிற்க்கு அருகில் இருக்கும் காளியம்மன் கோவிலுக்கு வாரத்திற்க்கு ஒரு முறை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். 

என்னிடம் வந்து இதற்கு தீர்வு தாருங்கள் என்று கேட்டால் உண்மையில் இந்த பாதிப்பில் நீங்கள் இருப்பது தெரியவந்தால் நீங்கள் என்னிடம் வரலாம். அதே நேரத்தில் பிறர்க்கு தீங்கு செய்ய நினைக்க வரகூடாது. உங்களின் பிரச்சினைக்கு தீர்வுக்கு மட்டும் வரலாம் உங்களை காத்துக்கொள்ளலாம். இது ஒரு கர்மம் பிடித்த வேலை அதனால் நீங்கள் இதற்கு அதிகப்பணம் செலவு செய்யவேண்டிவரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: