Followers

Thursday, March 13, 2014

குரு தசா பலன்கள் பகுதி 93


வணக்கம் நண்பர்களே!
                     குரு தசாப்பலனைப்பற்றி பார்த்து வந்தோம். இடையில் வேறு பதிவுகளை பார்த்ததால் இதனை மறந்தே போய்விட்டேன் எ்ன்று தான் சொல்லவேண்டும்.

ஒருவருக்கு குரு தசா நடைபெற்றால் அதுவும் குரு மறைவிடத்தில் இருந்து தசா நடைபெறுவது அந்தளவுக்கு சிறப்பை தருவதில்லை. இப்படிப்பட்டவர்கள் வெகுளிதனமாக இருப்பார்கள். அனைத்தையும் நம்புவார்கள்.

ஒருவருக்கு குரு தசா நடைபெற்றால் அவர் அன்பை அதிகம் எதிர்பார்ப்பார்கள். கடவுளே அன்புமயமானவர் தானே. அதேப்போல் அனைவரிடமும் அன்பை எதிர்பார்ப்பார்கள். ஒரு தூய்மையான அன்பு வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதனாலேயே பல பேரிடம் ஏமாந்தும் போனவர்களும் உண்டு. 

ஒரு சாமியாரிடம் மக்கள் ஏன் செல்லுகின்றனர் அவர் தூய்மையான அன்பை வெளிப்படுத்துகிறார் அதனால் மக்கள் சாமியார்களை தேடிச்செல்லுகின்றனர். கடவுளும் இப்படி அன்பை தான் வெளிப்படுத்துவார். குரு தசா ஒருவருக்கு நடைபெற்றால் கண்டிப்பாக இந்த இடத்திற்க்கு நீங்கள் செல்லுவீர்கள். குருவோடு சேரும் கிரகத்தை பொருத்து உங்களுக்கு நல்ல அன்பு கிடைக்கிறதா அல்லது ஏமாற்றும் அன்பு கிடைக்கிறதா என்று தெரியவரும்.

குருவின் தசா நடைபெறும்பொழுது அந்த குரு தீயகிரகங்களின் வீட்டில் அல்லது பார்வையில் இருந்தால் காதல் தோல்வியை தரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: