Followers

Friday, March 14, 2014

சிவனுக்கே செக் வைக்கும் வரம்


ணக்கம் ண்பர்களே!
                    நாம் என்ன தான் சிவனை விழுந்து விழுந்து கும்பிட்டாலும் அவர் ஒரு சந்நியாசிக்கு செய்வது போல் இல்லறத்தில் இருப்பவனுக்கு செய்வதில்லை. இல்லறத்தில் இருப்பவர்கள் அம்மனோடு இருக்கும் சிவனை வணங்கி வருவது நல்லது.

நான் பல பேர்களை எனது அனுபவத்தில் மற்றும் முன்னோர்கள் சொன்ன அறிவுரைப்படி கேட்டு வந்து இருக்கிறேன். இளம் வயதில் யார் ஒருவர் சிவனை வணங்கி வருகிறார்களோ அவர்களுக்கு இல்லறவாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை. இதில் பெரிய விசயம் என்ன என்றால் பல இளம் பெண்களும் பாதிப்படைந்து இருக்கின்றார்கள் என்பது தான் கொஞ்சம் கஷ்டமான ஒரு விசயம்.

எனக்கும் சிவனுக்கும் ஒன்றும் தகராறு கிடையாது. ஒரு சில கருத்தாக தான் இதனை நான் சொல்லிவருகின்றேன். இன்று காலபைரவர் வழிபாடு எல்லாம் பிரபலமாகிவருவது இதனை தான் காட்டுகிறது. 

சிவன் மேல் ஈர்ப்பு வருவதற்க்கு காரணம் நாம் வந்தது பிறவி கர்மாவை முடிப்பதற்க்கு நாம் கர்மாவை கூட்டிக்கொள்கிறோம். இயற்கையாகவே ஆத்மா தன் பழைய நிலைக்கு திரும்பவும் செல்லவேண்டும் என்பதால் சிவன் மேல் பாசம் எல்லாம் வரும். எப்படி இருந்தாலும் இல்லறத்தில் இருந்துக்கொண்டே நீங்கள் சிவனை அடையமுடியும்.

சிவனுக்கே செக் வைப்பவன் அல்லவா மனிதன் அதனால் நீங்கள் சிவனை வழிப்படும்பொழுது இல்லறவாழ்க்கையில் இருந்துக்கொண்டு உன்னை அடையவேண்டும் என்று ஒரு வரத்தையும் கூடுதலாக வைத்துவிடுங்கள். சிவன் மாட்டிக்கொள்வார். உண்மையில் கேட்டவுடன் கொடுக்கும் வள்ளல் அல்லவா சிவன். உங்களுக்கு நீங்கள் கேட்ட மாதிரியே கொடுத்துவிடுவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

antonyarun said...

Dear sir
The book of Bagavath Geeta tells about Siva
What is the benefits for read this book
Thanks
Antony