Followers

Monday, March 24, 2014

பணம் என்ற கடவுள்


வணக்கம் நண்பர்களே !
                    ஆன்மீகத்தில் நாம் கொஞ்சம் சாதிக்கவும், நமக்கு கடவுள் பக்தி கிடைக்கவும் முதலில் பணம் என்பது வேண்டும். பணத்தை வைத்திருந்தால் எமன் கூட உங்களை நெருங்காது. என்னடா ஆன்மீகவாதி இப்படி சொல்லுகிறார் என்று நினைக்கதோன்றும். 

கொஞ்சம் கையில் பணம் இருந்தால் மட்டும் தான் ஆன்மீகத்தில் ஏதாவது பூஜை செய்து நம்மை காப்பாற்றிக்கொள்ளமுடியும். இன்றைக்கு பூஜை செய்வதற்க்கு பணம் நிறைய தேவைப்படுகிறது. அதற்கு நம்மிடம் பணம் இருக்கும்பொழுது நாம் நம்மை இந்த வழியில் காப்பாற்றிக்கொள்ளமுடியும்.

ஒருத்தன் ஏழையாக இருந்தால் ஏழையாக தான் இருப்பான் அவனின் மனநிலை நாம் ஏழையாக தான் நாம் வாழவேண்டும் என்ற மனநிலை உருவாகிவிடும் அவனின் மனநிலையே அவனை கீழே இருந்து மேலே உயராமல் தடுக்கிறது.

நான் ஏழையாக இருக்க பிறந்தவன் கிடையாது பணம் சம்பாதிக்க பிறந்தவன் என்று உங்களின் மனநிலையை மாற்றிவிட்டால் போதுமான ஒன்று. உங்களை தேடி பணம் வந்தவிடும்.

கொஞ்சம் பணம் வந்தவுடன் நீங்கள் உங்களை மேம்படுத்திக்கொள்ள ஆன்மீகவழியை நாடினால் போதுமானது. பணம் நிறைய வேண்டும்பொழுது ஆன்மீகவழியை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். ஆன்மீகவழியை மேம்படுத்தும்பொழுது உங்களுக்கு பணம் வந்துக்கொண்டே இருக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

அனுபவத்தில் சொல்கிறேன் முற்றிலும் உண்மை ....மறுக்க முடியாது.