Followers

Tuesday, March 25, 2014

ஆன்மீகவாதியாக மாறிவிடுங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைக்கு மக்கள் இருக்கும் பிரச்சினையில் ஆன்மீகவாதிகளை தேடிச்செல்லுகின்றனர். மக்கள் ஆன்மீகவாதிகளை தேடிச்செல்வது தவறு இல்லை. அதே நேரத்தில் ஆன்மீகவாதிகளே கதி என்று நீங்கள் இருந்துவிடகூடாது.

நீங்களும் மனிதர்கள் தான் ஆன்மீகவாதிகளும் மனிதர்கள் தான் ஆனால் ஆன்மீகவாதிகள் தங்களை உணர்ந்துவிட்டார்கள் நீங்கள் உணரவில்லை. நீங்கள் உணரவேண்டும் அது மட்டும் தான் மீதி. நீங்கள் உணர்ந்துவிட்டால் போதும்.

ஒரு பிரச்சினைக்காக தன்னை ஆன்மீகவாதியாக மாற்றிக்கொள்ள வேண்டுமா என்று நினைக்க தோன்றும்.அந்த பிரச்சினையை ஏற்படுத்தி இயற்கையின் காரணம் நீங்கள் ஆன்மீகவாதியாக மாறவேண்டும் என்பதற்க்காக மட்டுமே ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பிரச்சினையை அடுத்த நபரிடம் நீங்கள் தீர்த்துக்கொண்டால் அடுத்த பிரச்சினை தயாராக உங்கள் முன்னாடி நிற்க்கும்.

பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும் நீங்கள் ஒரு நாள் ஆன்மீகவாதியாக மாறிவிட்டால் கண்டிப்பாக அடுத்த நாளிலில் இருந்து பிரச்சினை உங்களை நெருங்கி வராது.

 நீங்கள் என்று ஆன்மீகவாதியாக மாறுகின்றீர்களோ அன்று முதல் உங்களின் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் எதிர்க்கொள்ளும் திறமை வந்துவிடும். இன்றைய கலியுகத்தில் நிமிடத்திற்க்கு ஒரு முறை பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும். அதற்கு தீர்வு நீங்கள் ஆன்மீகவாதியாக மாறிவிடுங்கள். ஆன்மீகவாதியை தேடிச்செல்லவேண்டியதில்லை. ஆன்மீகவாதியாக மாறிவிடுங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: