Followers

Thursday, March 27, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    மாதத்தில் முதல் வாரத்திலேயே அம்மனுக்கு பூஜை வைத்துவிடுவார் இந்த மாதம் மட்டும் மாதகடைசியில் பூஜையை வைத்து இருந்தார் என்ன காரணம் என்று தெரியவில்லையே என்று பல பேர் குழம்பிபோய் இருக்கலாம்.

பதிவு கூட குறைந்தளவு தான் கொடுத்துக்கொண்டிருந்தேன். இதற்க்கு காரணம் நமது ஊரில் நமக்கு உறவினர் ஒருவர் இறந்து இருந்தார். அந்த காரணத்தால் அனைத்தையும் தாமதப்படுத்தினேன். இறந்த அன்று ஒரு நாள் மட்டும் தான் நமக்கு விலக்கு என்றாலும் பூஜை செய்வது நாம் என்பதால் முப்பது நாள் செல்லட்டும் என்று இருந்தேன்.

நமது அம்மனுக்கு எந்த தீட்டும் கிடையாது. ஊரில் இறந்து கிடந்தாலும் கோவிலில் பூஜை செய்துக்கொண்டு இருக்கலாம். பூஜை செய்வது நாம் என்பதால் செல்லாமல் இருந்தேன். அங்காளபரமேஸ்வரி எங்கு இருந்தாலும் அதன் அருகில் சுடுகாடு இருக்கும். சுடுகாட்டு அருகில் இருந்தால் மட்டுமே அம்மன் அந்த இடத்தில் இருக்கும். அப்படி இல்லை என்றால் அம்மன் அங்கு இருக்காது.

நமது அம்மனின் கோவில் அருகில் சுடுகாடு அமைந்துள்ளது. அம்மனுக்கு மதியம் அல்லது இரவு நேரம் என்று கணக்கு கிடையாது எந்த நேரத்திலும் பூஜை செய்துக்கொண்டே இருக்கலாம். அம்மனின் சக்தி அப்படிப்பட்டது என்பதால் நேரம் காலம் கிடையாது. 

இனி வழக்கம்போல் சோதிடம் மற்றும் ஆன்மீகபதிவுகள் நிறைய கொடுக்கிறேன். சோதிட ஆலோசனைகள் பாதி அப்படி நின்றுக்கொண்டு இருக்கிறது அதற்க்கும் நேரம் ஒதுக்கி சொல்லிவிடுகிறேன். உற்சாகத்தோடு இனி தொடங்கிவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: