Followers

Monday, March 3, 2014

கடைசி நிமிடம்


ணக்கம் ண்பர்களே!
                    ஒவ்வொரு வேலையும் எடுத்து செய்யும்பொழுது அந்த வேலையின் கடைசியில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டு அது வேலை நிற்கும் நிலையை பல வேலைகளில் நான் பார்த்திருக்கிறேன்.

எல்லா வேலையும் முடிந்தபிறகு கடைசியில் கையில் கிடைக்கும்பொழுது மனிதர்களின் மனம் என்ன நினைக்கிறது என்றால் அனைத்து முயற்சியும் நம்மால் தான் நடைபெற்றது என்று மனிதர்கள் நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்படி நினைக்கும் நேரத்தில் அம்மன் வேலையை காட்டிவிடும் காரியம் நின்றுவிடும்.

பொதுவாக ஆன்மீகத்தை வடமாநிலத்தவர் பயன்படுத்துவது மாதிரி ஒரு தமிழர் கூட பயன்படுத்துவதில்லை என்றே பல நேரங்களில் நான் நினைப்பது உண்டு. ஜாதககதம்பத்தில் வரும் நண்பர்களுக்காக நாம் ஏதாவது ஒன்றை செய்யலாம் என்றால் அது விபரீதமாக தான் முடிகிறது.

இதுவரை ஒரு தமிழர் கூட என்னிடம் இந்த தொழில் வளர்ச்சியை பயன்படுத்தவில்லை என்று தான் சொல்லவேண்டும். இவர்களின் நிலை அப்படி இருக்கின்றது நாம் ஒன்றும் குறை சொல்லுவதற்க்கு இல்லை.

எந்த ஒரு வேலையும் மனிதமுயற்சியும் வேண்டும் அதே நேரத்தில் தெய்வபலமும் வேண்டும் அந்த நேரத்தில் மட்டுமே காரிய வெற்றி பெறும்.தொழில் உதவிக்கு என்று வருவது பிரச்சினையில்லை. நீங்கள் நினைப்பது போல் உடனே நான் செய்வேன் என்று மட்டும் எதிர்பார்க்ககூடாது. அனைத்தும் படிப்படியாக தான் நடைபெறும். ஏன் படிப்படியாக செய்கிறேன் .

பொதுவாக என்னை புரிந்துக்கொள்வது கொஞ்சம் கடினம். முடிந்தவரை பிற ஆன்மீகவாதிகளிடம் சென்று உங்களின் பிரச்சினையை சொல்லி தீர்க்க பாருங்கள். முடியாத பட்சத்தில் என்னிடம் வரலாம். என்னடா இவர் இப்படி சொல்லுகிறாரே என்று நினைக்கலாம். கர்மாவை தீர்ப்பது என்பது சாதாரணமான விசயம் கிடையாது. அதற்கு பலவற்றை நாம் இழக்கவேண்டிவரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

sir,
For people who is having second house dasa and 7th house dasa, you asked to say mrithyunjya mantra. how many times we need to say that? what is the procedure.

Also the are 2 mrinthyunjaya mandtrams. Shall we say both mantras or should say one. please clarify.