Followers

Monday, March 3, 2014

சோதிட ஆலோசனை


வணக்கம் நண்பர்களே!
                    ஒருவர் நன்றாக வாழ்வதற்க்கு ஏகாப்பட்ட காரணங்கள் இருந்தாலும் ஒருவருக்கு கிடைக்கும் சோதிடர் தான் மிக முக்கியமானவர்களாக இருப்பார்கள். ஏன் என்றால் ஒரு சோதிடர் சரியாக ஒருவருக்கு கைடு கொடுத்தால் சம்பந்தப்பட்ட நபர் புகழின் உச்சிக்கு செல்லமுடியும். ஒருவருக்கு தவறாக கைடு செய்தால் சம்பந்தப்பட்ட நபர் எப்பேர்பட்ட கோடிஸ்வராக இருந்தாலும் பாதாள உலகத்த்திற்க்கு சென்றுவிடுவார்.

ஒரு சோதிடன் நினைத்தால் ஆக்கவும் செய்வான் அழிக்கவும் செய்வான். என்னிடம் தொழில் செய்வதற்க்கு உதவி வேண்டும் என்று பல பேர்கள் வருகிறார்கள். இதில் பங்குவர்த்தகத்திற்க்கு என்று நான் பொதுவாக உதவி செய்வதில்லை ஆனால் ஒரு நபர் மட்டும் வந்து என்னிடம் சார் நீங்கள் இதற்கு உதவி செய்யவேண்டாம் சோதிட வழியாக இந்த வாரத்திற்க்கு எனக்கு எந்தந்த கிரகங்கள் தீமை செய்யும் அதற்கு நீங்கள் கொடுக்கும் சின்ன சின்ன பரிகாரங்களை மட்டும் எனக்கு சொல்லுங்கள் போதும். மீதி உள்ளதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கேட்டார்.

அவரின் ஜாதகத்தை வைத்து அவருக்கு கிரகங்களைப்பற்றி சொல்லி வாரம் வாரம் இந்த மாதிரி செய்யுங்கள் என்று சொன்னேன். அந்த நபரும் சரியாக செய்துகொண்டு வருகிறார். இதுவரை எனக்கு ஒழுங்காக பணம் அனுப்பும் ஒரே நபர் அந்த நபர் மட்டும் தான். 

அவர் செய்யும் பரிகாரத்திற்க்கு அம்மன் துணை நிற்கும் அவ்வளவு தான் எனது வேலை. மீதி எல்லாம் அவரே பார்த்துக்கொள்கிறார். எப்படி அவர் வெற்றி பெறுகிறார் என்றால் வாரம் ஒரு முறை அவரின் ஜாதகத்தை நான் பார்த்து இதனை செய்யவேண்டும் என்று சொல்லிவிடுகிறேன். அவரும் செய்துவிடுவார். பொதுவாக அவருக்கு நான் பரிந்துரைக்கும் பரிகாரம் வெறும் பத்து ரூபாயில் செய்வதுபோல் இருக்கும்.

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஒரு சோதிடராக இருந்துக்கொண்டு இந்த உதவியை ஒருவருக்கு செய்தாலே போதும். அவரின் வாழ்க்கை எங்கேயோ சென்றுவிடும். நான் இந்த ஆலோசனையை சொன்னாலும் அதனை தவறாமல் செய்துவிடுகிறார்.

சொல்லுவது பெரிய விசயம் கிடையாது. நான் சொல்லுவதை நம்பி கடைபிடித்துவருகிறார். அந்த நம்பிக்கை மற்றும் தொழிலில் அவருக்கு இருக்கும் அறிவால் வெற்றி பெறுகிறார்.ஒருவருக்கு நாம் கொடுக்கும் சோதிடஆலோசனை மிகப்பெரிய ஒரு உதவி. நீங்களும் சோதிடர் தான் உங்களின் வாடிக்கையாளருக்கு இப்படிப்பட்ட ஆலோசனையை கொடுத்து காப்பாற்றுங்கள். நீங்களும் வாழலாம் அவரும் வாழ்வார்.

ஜாதகத்தை வைத்து நாம் செய்யும் சின்ன விசயம் சம்பந்தப்பட்ட நபருக்கு மிகப்பெரிய அளவில் தூக்கி நிறுத்தும். நான் கொடுப்பது எல்லாம் சிறிய அளவிலேயே இருப்பது போல் கொடுப்பேன். பிறகு வளர்ந்த பிறகு படிப்படியாக உயர்த்துவேன்.சிறிய பூஜையில் ஆரம்பித்து பெரிய அளவில் பூஜை செய்ய வைக்கவேண்டும். பத்து ரூபாயில் ஆரம்பித்து பத்தாயிரம் ரூபாய்க்கு பூஜை செய்வது போல் ஒரு மாதத்திற்க்குள் செய்யவேண்டும். அப்பொழுது தான் நன்றாக தொழில் தெரிந்த சோதிடன் என்று பேர் வாங்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Kalairajan said...

Ayya
pathivu arumai