Followers

Monday, March 3, 2014

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று நாடியை பற்றி சொன்னவுடன் என்ன சார் சித்தர்களை பற்றி எல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டீர்கள் உங்களுக்கு தெரிந்த சித்தர்களின் தகவல்களைப்பற்றி சொல்லுங்கள் என்று பல நண்பர்கள் எனக்கு மெயில் அனுப்பியும் போன் செய்தும் கேட்டார்கள்.

எனது குரு மற்றும் பல ஆன்மீகவாதிகளிடம் கேட்ட ஒரு சித்தர்களின் தகவலைப்பற்றி சொல்லுகிறேன். அகத்தியர் அவரோடு சேர்ந்த சித்தர்கள் எல்லாம் அதாவது பதினெட்டு சித்தர்களை எல்லாம் நமது தமிழ்நாட்டில் பக்கத்துவீட்டு பங்காளி போல் அங்கு பார்த்தேன் இங்கு பார்த்தேன். அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தேன். அங்கு விசிட் செய்திருக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றனர்.

இவர்களை நான் எப்படியும் பார்த்துவிடவேண்டும் என்று நான் பல முறை முயற்சி செய்திருக்கிறேன். என்னோடு என்ன தகராறு என்று தெரியவில்லை. அவர்கள் என் பக்கம் கூட தலைவைத்து படுப்பதில்லை.சிவபெருமானையே பார்த்துவிடலாம் போலிருக்கு இவர்களை பார்க்கமுடியவில்லை.

நான் என்ன பாவம் செய்தேன் ஏன் இவர்களை பார்க்கமுடியவில்லை என்று நினைத்துக்கொண்டு எனது குரு மற்றும் எனக்கு தெரிந்த ஆன்மீகவாதிகளிடம் சென்று கேட்டப்பொழுது பதினெட்டு சித்தர்களை நீ ஒருபொழுதும் பார்க்க முடியாது.

அவர்களுக்கு பிறகு உள்ள சித்தர்களை வேண்டுமானால் நீ பார்க்கலாம் என்று சொன்னார்கள். சரி என்று நமக்கு கற்றுக்கொடுத்த ஆசானே சொன்ன பிறகு அதில் நாம் சென்று தோல்வி அடையவேண்டாம் என்று எண்ணி விட்டுவிட்டேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: