Followers

Friday, March 28, 2014

அம்மன் தரிசனம்


ணக்கம் ண்பர்களே!
                    நமக்கு அம்மனை பார்க்கவேண்டும் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. விதவிதமாக அலங்கரித்து அம்மனை வழிப்பட்டவன் அந்த காரணத்தால் அம்மன் மேல் தனி பிரியம் என்று சொல்லலாம். இன்று மாலை காளிக்காம்பாளை பார்க்க செல்லவேண்டும். 

நீண்ட நாட்களாக திருவக்கரை வக்கிரகாளியம்மனை பார்க்கவில்லை அதனால் நாளை சனிக்கிழமை அன்று அங்கு சென்று வணங்கி வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். நாளை அம்மன் கூப்பிடுகிறதா என்று பார்க்கவேண்டும்.

நமது பிரச்சினைக்கு இந்த கலியுகத்தில் ஒரு நல்ல சக்தி நம்மை ஆசீர்வதித்தால் மட்டுமே நாம் நன்றாக இருக்கலாம். அப்படிப்பட்ட சக்தியின் ஆசீர்வாதத்தை வாங்குவதற்க்கு நாளை கண்டிப்பாக செல்லவேண்டும். நம்மிடம் அம்மன் இருந்தாலும் அலங்காரத்தில் அம்மனை ஒரு முறை நேரில் சந்திப்பதற்க்கு நன்றாக இருக்கும். அந்த மனநிறைவுக்காக செல்லுவது உண்டு.

நீங்களும் இப்படிப்பட்ட வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. அம்மனின் சக்தியை உணர்ந்தவர்களுககு தான் அதன் அருமை புரியும். அதனை உணரவேண்டும் என்பதற்க்கு பல பதிவில் அதனைப்பற்றி எழுதுகிறேன். இன்று மற்றும் நாளை உங்களுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: