Followers

Friday, March 28, 2014

சோதிட அனுபவம்


ணக்கம் ண்பர்களே!
                    ஜாதகத்தில் நாம் எந்த கிரகம் பிரச்சினை தராது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோமோ அந்த கிரகம் நமக்கு மிகபெரிய அளவில் பிரச்சினையை தந்துவிடும். அனைத்து கிரகத்தையும் நாம் பார்த்துவிடவேண்டும். அப்பொழுது தான் நாம் பிரச்சினையை கண்டுபிடிக்கலாம். 

ஒருவருக்கு ஒரு தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். உதாரணத்திற்க்கு சுக்கிரன் தசா நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். சுக்கிரன் என்றால் நமக்கு சுகமான வாழ்வை தரவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருப்போம் ஆனால் நமக்கு அந்த தசாவில் சுகமான வாழ்வு தரவில்லை என்றால் நாம் தசா ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று இருந்துவிடகூடாது. சுக்கிரன் நோயில் இழுத்துக்கொண்டு விட்டுவிடுவார்.

நான் அனைவருக்கும் தசா நாதனுக்கு ஒரு பரிகாரம் செய்துவிடுங்கள் என்று சொல்லுவேன். ஏன் என்றால் நல்லது தரவில்லை என்றாலும் பிரச்சினையில் கொண்டுவிட்டுவிடகூடாது. பொதுவாக தசாநாதனுக்கு முக்கியதுவம் கொடுத்தால் மட்டுமே நாம் ஏதாவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை பார்க்கமுடியும்.

ஒவ்வொரு தசாநாதனுக்கும் விதவிதமான பரிகாரம் இருக்கின்றது அதேப்போல் புத்திநாதனுக்கும் பரிகாரம் இருக்கின்றது. அதனை எல்லாம் அவ்வப்பொழுது பதிவில் சொல்லிவருகிறேன். ஒரு சில பரிகாரத்தை வெளியில் சொல்லுவதில்லை. பொதுவில் வைக்ககூடாது என்பதால் வைத்து இருக்கிறேன். என்னை சந்தித்து ஆலோசனை கேட்கும்பொழுது அதனை உங்களுக்கு தருகிறேன்.

கிரகங்கள் வேலை செய்யாமல் இருக்கவே இருக்காது. தவறான பலனை கொடுக்ககூடாது. அதற்கு நாம் பரிகாரம் செய்துக்கொள்ளவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

நண்பரை !
பெயர் : க.சதீஷ்
பிறந்த தேதி : 29 - 5 - 1978
பிறந்த நேரம் : 7: 15 a m
அட்ச , தீர்க்க ரேகை - 7 9 E 5 4 , 12 N 31

வாக்கி படி ராசிகளின் அமைப்பு
மிதுன லக்னம்.
1 இல்- குரு, சுக்ரன் (லக்னத்தில் )
2 இல் - செவ்வாய், சனி
4 இல் - ராகு
9 இல் - சந்திரன்
10 இல் - கேது
12 இல் - புதன், சூரியன்

திருகணிதபடி ராசிகளின் அமைப்பு
1 இல்- குரு, சுக்ரன் (லக்னத்தில் )
2 இல் - செவ்வாய்,
3 இல் - சனி
4 இல் - ராகு
9 இல் - சந்திரன்
10 இல் - கேது
11 இல்- புதன்
12 இல் , சூரியன்

வாக்கி படி --------> 2 ல் (சனியும் , செவ்வாயும்), 12 ல் (புதன் , சூரியன் )
திருகணிதபடி ---> 2 ல் - செவ்வாய், 3 ல் - சனி , 11 ல்- புதன் ,12 ல் , சூரியன்

தாங்கள் இதில் எது சரி என்று எடுத்துகொள்வது என்று கூறுமாறு பணிவுடன் கேட்டு
எனது எதிர்காலம் எப்படி இருக்கும் என கூறுங்கள்....