Followers

Saturday, March 15, 2014

அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே!
                   நமது ஜாதககதம்பம் வழியாக பரிகாரத்திற்க்கு என்று எந்த கட்டணமும் இல்லாமல் செய்துக்கொடுத்துக்கொண்டிருந்தேன். இதில் பலர் பயன் அடைந்தார்கள். இதில் இப்பொழுது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பரிகாரம் வெற்றி அடைந்தவுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் பணம் அனுப்பவேண்டும் என்பது விதி. நமது நண்பர்கள் என்ன செய்கின்றனர் என்றால் காரியம் முடிந்தவுடன் பணம் அனுப்புவதில்லை. போனில் தொடர்புக்கொண்டால் அது இது என்று இழுத்து அடிக்கின்றனர்.

கடைசியில் அம்மன் பூஜைக்கு பணம் அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு இருக்கின்றனர். நானும் எப்படி மறுபடி மறுபடியும் தொடர்புக்கொள்வது என்று விட்டுவிடுகின்றேன். இப்பொழுது அது பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு வேலை செய்து அதில் வரும் பணத்தை வைத்து நான் பல பேருக்கு பணம் அனுப்பவேண்டும். 100 ரூபாய் வரும் என்று வைத்துக்கொண்டால் எனது வீட்டிற்க்கு 25 ரூபாய் தான் எடுத்து செல்லமுடியும். இப்படி கடுமையான விதி இருக்கும்பொழுது இதிலும் எனக்கு பாதிப்பு வந்துவிடுகிறது.

பொதுவாக எனது வேலையில் நம்பிக்கை வைத்து தான் இதனை உங்களுக்கு செய்துக்கொண்டு இருந்தேன். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை நடந்துக்கொண்டு இருந்தது. வேலையில் வைத்த அதே நம்பிக்கை உங்களின் மேல் வைத்தேன். அது பிரச்சினையாகிவிட்டது.

அம்மனின் வேண்டுதல் என்பது வேறு. எனது வேலை வேறு. அம்மனிடம் நமது தளத்திற்க்கு வரும் நண்பர்கள் அம்மனிடம் வேண்டுதல் வைத்து அது நிறைவேறியவுடன் பணத்தை அனுப்புவார்கள். அதுவும் அம்மனின் பூஜைக்கு என்று அனுப்புவார்கள். பரிகாரம் என்று என்னிடம் வருபவர்கள் அம்மனின் பூஜைக்கு பணம் அனுப்புகிறேன் என்று சொல்லுவது தவறு.
 
இனிமேல் எந்த ஒரு வேலையும் பணம் இல்லாமல் செய்யப்படமாட்டாது. பணத்தை செலுத்தினால் மட்டுமே தொடங்குவேன்.  என்னால் முடிந்த உதவியை நான் செய்துக்கொண்டு இருக்கின்றேன். பரிகாரத்தில் பிரச்சினை வருவதால் பணத்தை செலுத்தி விட்டு செய்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு