Followers

Friday, April 18, 2014

மறுபிறவி பகுதி 10


வணக்கம் நண்பர்களே!
                    மறுபிறவி தொடரில் இப்பதிவில் மிதுன லக்கினத்தில் ஒருவர் பிறந்து இருந்தால் அவருக்கு அடுத்த பிறவி எப்படி அமையும் என்பதை பார்க்கலாம்.

மிதுன லக்கினம்
             முதலில் மிதுன லக்கினத்தில் உள்ளவர்களுக்கு எப்படி மரணம் வரும் என்பதைப்பற்றி பார்த்து விடலாம். மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு இயல்பாக மரணம் அமைவது கிடையாது. வாழ்நாட்கள் அதிகம் என்றாலும் படுத்து படுமையாக இருந்து நீண்ட நாட்கள் படுகையில் இருந்து உயிரை விடுவார்கள்.

நினைவு இல்லாமல் கூட இருந்து உயிரை விடும் நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு மூளை சாவு என்று சொல்லுகிறோம் அல்லவா அதுப்போல் ஏற்பட்டு மரணம் அடைவார்கள். பெரும்பாலும் மருத்துவமனையில் இருந்து உயிரை விடும் நிலை ஏற்படும்.

மறுபிறவி

உங்களின் வீட்டில் இருந்து தென்கிழக்கு திசையில் பிறப்பு எடுப்பீர்கள். உங்களின் வீட்டில் அதிகப்பட்சம் பெண்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. நீங்களும் பெண்ணாக கூட பிறக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் அழகாக பிறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

உங்களின் வீட்டின் அருகில் வனங்கள் இருப்பதற்க்கும் வாய்ப்பு உண்டு. அந்த வனப்பகுதியில் காளி கோவில் ஒன்று இருக்கும். அந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலாக இருக்கும். கலைதுறை அல்லது வாகன துறையில் உங்களின் குடும்பத்தார்கள் பணியாற்றி வருவார்கள்.

நீங்கள் அதிகப்பட்சம் பொதுநலனுக்காக பாடுபடுபவர்களாக இருப்பீர்கள். அனைத்து வேலையும் இழுத்துபோட்டு செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள். புதிய கண்டுபிடிப்புகள் மீதும் ஆர்வம் உங்களுக்கு இருக்கும்.

என்ன மிதுன லக்கின நண்பர்களே நான் சொல்லுவதை கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் அடுத்த பிறவி இப்படி தான் அமையும் என்பது உங்களுக்கு புரியும். இன்றே சிந்தனை செய்து பாருங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: